ஆப்நகரம்

பிஎஃப் கணக்கை ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்களது பிஎஃப் கணக்கு முடங்கிவிட்டால் அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 17 Jan 2021, 3:56 pm
பொது வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) என்பது இந்தியாவில் உள்ள முதலீட்டுத் திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தில் 15 ஆண்டு முதிர்வு காலத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். அப்படி டெபாசிட் செய்தால் பிஎஃப் கணக்கு செயல்பாட்டிலேயே இருக்கும். நீங்கள் சரியான நேரத்தில் டெபாசிட் செய்யாவிட்டால் உங்களது கணக்கு முடங்கிவிடும். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.1.50 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் உங்களது கணக்கு முடங்கிவிட்டால் அதை நீங்கள் மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம்.
Samayam Tamil pf


வங்கி, தபால் நிலையம் என நீங்கள் எங்கு பிஎஃப் கணக்கைத் தொடங்கினீர்களோ அங்கு சென்று பிஎஃப் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு எழுத்து வாயிலாகக் கோரிக்கை வைக்க வேண்டும். உங்களது 15 வருட முதலீட்டுக் காலத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ரூ.500 கணக்கிட்டு அதனுடன் அதனுடன் ரூ.50 அபராதமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் கோரிக்கை விண்ணப்பத்தை வழங்கியவுடன் வங்கி / தபால் நிலையம் உங்களது கோரிக்கையைச் சரிபார்த்து பிஎஃப் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்யும். ஒருவேளை 15 வருட சேமிப்புக் காலம் முடிந்துவிட்டால் உங்களது பிஎஃப் கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட மாட்டாது.

விமானத்தில் பறந்த 6.3 கோடிப் பேர்! கொரோனாவால் வீழ்ச்சி!

பிஎஃப் சேமிப்புக் கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் தேவையான காலத்தில் பணத்தை எடுத்துப் பயன்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனுமதிக்கிறது. சமீபத்தில் கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதித்தது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் பலர் தங்களது சேமிப்புப் பணத்தை எடுத்து வருகின்றன. சேமிப்புப் பணத்தை எடுப்பதற்கு உங்களது வங்கிக் கணக்கை இணைப்பது அவசியமாகும். சிலர் தங்களது பழைய வங்கிக் கணக்கை மூடிவிட்டு புதிய வங்கிக் கணக்கைத் திறந்தால் அதை பிஎஃப் கணக்கில் இணைக்காமல் விட்டுவிடுவார்கள். எனவே வங்கிக் கணக்கை அப்டேட் செய்வதும் முக்கியமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்