ஆப்நகரம்

போஸ்ட் ஆபீஸ் போக வேண்டாம்... இந்த ஆப் இருந்தா போதும்!

மொபைல் ஆப் மூலமாகவே டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 10 Feb 2021, 3:17 pm
இந்தியாவில் இப்போது ரொக்கப் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகள்தான் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடிவதால் நேரம் வீணாவதும் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படுகிறது. இதனால் போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற மொபைல் செயலிகள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. இந்திய தபால் துறை சார்பாக, இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் என்ற ஆப் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் போஸ்ட் ஆபீஸ் சேவைகளையும் பெற முடிகிறது.
Samayam Tamil app


இந்த ஆப் மூலமாக, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பிபிஎஃப் போன்ற கணக்குகளுக்கும் பணம் அனுப்ப முடியும். இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் ஆப்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலையங்களுக்குச் செல்லாமலேயே இந்த ஆப் மூலமாக வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கைத் தொடங்க முடியும்.

SBI rupay card: இதைச் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

இந்தக் கணக்கைத் தொடங்குவதற்கு வாடிக்கையாளர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேபோல, டிஜிட்டல் முறையில் கணக்கு தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் பயோமெட்ரிக் சரிபார்ப்பையும் செய்திருக்க வேண்டும். இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்துக்கு மட்டுமே உபயோகத்தில் இருக்கும். இந்த டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை 12 மாதங்களுக்குப் பிறகு போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கில் இணைத்துவிடலாம்.

டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு தொடங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

>> இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் செயலியைப் பதிவிறக்கம் செய்து Open Account என்பதை கிளிக் செய்யவும்.

>> பான் கார்டு நம்பர் மற்றும் ஆதார் கார்டு நம்பரைப் பதிவிடவும்.

>> இதன் பின்னர் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிடவும்.

>> கல்வித் தகுதி, முகவரி போன்ற விவரங்களைப் பதிவிட்ட பின்னர் Submit கொடுக்கவும்.

>> இப்போது உங்களது டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு ஓப்பன் ஆகிவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்