சமீபத்தில் நடந்த ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதன் காரணமாக, ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே உள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஏனெனில் வட்டி விகிதங்கள் இன்னும் 9 சதவீதத்திற்கு மேலேயே உள்ளன. அதேநேரம், ஹெச்டிஎஃப்சி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பெரிய வங்கிகள் சமீபத்தில் தங்கள் கடன் விகிதங்களை அதிகரித்துள்ளன.
2022ஆம் ஆண்டின் மே மாதம் முதல் 2023ஆம் ஆட்னின் பிப்ரவரி மாதம் வரை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 250 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. பெரும்பாலான வங்கிகளுக்கு ரெப்போ விகிதம் என்பது வீட்டுக் கடன் விகிதத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாகும். எனவே, ரெப்போ விகிதம் குறையாமல் இருப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக் கடன் சுமையை எப்படிக் குறைப்பது என்பதே வீட்டுக் கடன் வாங்குபவர்களின் கேள்வியாக உள்ளது.
பெஞ்ச் மார்க் ரேட் என்பது சில்லறை கடன் வழங்குவதில் ஒரு முக்கிய பகுதியாகும். வங்கியில் வழங்கப்படும் கடனுக்கான மிகக் குறைந்த விகிதம் இதுவாகும். 2019ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் வீட்டுக் கடன் விகிதங்கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தற்போது 6.5 சதவீதமாக உள்ளது.
ரெப்போ இணைக்கப்பட்ட கடன்களின் முக்கிய அங்கமான 'கடன் பரவல்' (Loan spread) என்பது கிரெடிட் ஸ்கோர், வருமான ஆதாரங்கள் மற்றும் விண்ணப்பித்த கடன் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் வீட்டுக் கடன் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளது. அந்த நேரத்தில் அவை ரெப்போ விகிதத்தை விட 275 முதல் 360 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாக இருந்தன. தற்போது, குறைந்த வட்டி விகிதங்கள் 8.30% முதல் 8.50% வரை இருக்கின்றன.
பல்வேறு வங்கிகள் சுமார் 8.50 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்ற. இந்தக் காலகட்டத்தில், 8.50 சதவீதத்துக்கு மேல் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலுத்துகிறார்கள் என்பதை கடன் வாங்குபவர்கள் மதிப்பிடலாம். 50 அடிப்படை புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால் தற்போதைய விகிதத்தில் அதை நிர்வகிக்கலாம். ஆனால் 50 அடிப்படைப் புள்ளிகளுக்கு மேல் 9 முதல் 10% வரம்பில் இருந்தால் கடன் வாங்குபவர்கள் குறைந்த வீட்டுக் கடன் விகிதத்திற்கு மாறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடன் வாங்குபவர்கள் தங்களுடைய தற்போதைய வங்கியிடம் குறைந்த விகிதத்தில் கடனை மறுநிதியளிப்பதற்கு கோரலாம். இந்த விருப்பம் குறைவான செயலாக்கக் கட்டணங்களை உள்ளடக்கியிருக்கும். தற்போதுள்ள கடன் வழங்கும் வங்கி இந்த விருப்பத்தை வழங்கவில்லை என்றால் மற்றொரு வங்கியில் மறுநிதியளிப்பு பற்றி நீங்கள் விவாதிக்கலாம்.
உங்கள் நிதி நிலை நன்றாக இருந்தால் சுமையை குறைக்க மீதமுள்ள கடன் தொகையில் 5 சதவீதம் முன்கூட்டியே செலுத்துவதை நீங்கள் பரிசீலிக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் கூடுதல் EMI முன்பணம் செலுத்துவதன் மூலம் அவர்கள் EMI சுமைய அதிகரிக்கலாம் அல்லது கடன் காலத்தைக் குறைக்கலாம். இது தவிர, மீதமுள்ள முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவது குறித்தும் பரிசீலனை செய்யலாம்.
2022ஆம் ஆண்டின் மே மாதம் முதல் 2023ஆம் ஆட்னின் பிப்ரவரி மாதம் வரை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 250 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. பெரும்பாலான வங்கிகளுக்கு ரெப்போ விகிதம் என்பது வீட்டுக் கடன் விகிதத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாகும். எனவே, ரெப்போ விகிதம் குறையாமல் இருப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக் கடன் சுமையை எப்படிக் குறைப்பது என்பதே வீட்டுக் கடன் வாங்குபவர்களின் கேள்வியாக உள்ளது.
பெஞ்ச் மார்க் ரேட் என்பது சில்லறை கடன் வழங்குவதில் ஒரு முக்கிய பகுதியாகும். வங்கியில் வழங்கப்படும் கடனுக்கான மிகக் குறைந்த விகிதம் இதுவாகும். 2019ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் வீட்டுக் கடன் விகிதங்கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தற்போது 6.5 சதவீதமாக உள்ளது.
ரெப்போ இணைக்கப்பட்ட கடன்களின் முக்கிய அங்கமான 'கடன் பரவல்' (Loan spread) என்பது கிரெடிட் ஸ்கோர், வருமான ஆதாரங்கள் மற்றும் விண்ணப்பித்த கடன் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் வீட்டுக் கடன் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளது. அந்த நேரத்தில் அவை ரெப்போ விகிதத்தை விட 275 முதல் 360 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாக இருந்தன. தற்போது, குறைந்த வட்டி விகிதங்கள் 8.30% முதல் 8.50% வரை இருக்கின்றன.
பல்வேறு வங்கிகள் சுமார் 8.50 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்ற. இந்தக் காலகட்டத்தில், 8.50 சதவீதத்துக்கு மேல் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலுத்துகிறார்கள் என்பதை கடன் வாங்குபவர்கள் மதிப்பிடலாம். 50 அடிப்படை புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால் தற்போதைய விகிதத்தில் அதை நிர்வகிக்கலாம். ஆனால் 50 அடிப்படைப் புள்ளிகளுக்கு மேல் 9 முதல் 10% வரம்பில் இருந்தால் கடன் வாங்குபவர்கள் குறைந்த வீட்டுக் கடன் விகிதத்திற்கு மாறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடன் வாங்குபவர்கள் தங்களுடைய தற்போதைய வங்கியிடம் குறைந்த விகிதத்தில் கடனை மறுநிதியளிப்பதற்கு கோரலாம். இந்த விருப்பம் குறைவான செயலாக்கக் கட்டணங்களை உள்ளடக்கியிருக்கும். தற்போதுள்ள கடன் வழங்கும் வங்கி இந்த விருப்பத்தை வழங்கவில்லை என்றால் மற்றொரு வங்கியில் மறுநிதியளிப்பு பற்றி நீங்கள் விவாதிக்கலாம்.
உங்கள் நிதி நிலை நன்றாக இருந்தால் சுமையை குறைக்க மீதமுள்ள கடன் தொகையில் 5 சதவீதம் முன்கூட்டியே செலுத்துவதை நீங்கள் பரிசீலிக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் கூடுதல் EMI முன்பணம் செலுத்துவதன் மூலம் அவர்கள் EMI சுமைய அதிகரிக்கலாம் அல்லது கடன் காலத்தைக் குறைக்கலாம். இது தவிர, மீதமுள்ள முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவது குறித்தும் பரிசீலனை செய்யலாம்.