ஆப்நகரம்

ஏடிஎம்மில் பாதுகாப்பாக பணம் எடுப்பது எப்படி?

ஓடிபி முறையில் ஏடிஎம்மில் பாதுகாப்பாக பணம் எடுப்பது எப்படி?

Samayam Tamil 16 Jan 2022, 8:01 pm
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மோசடிகளை தவிர்ப்பதற்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க OTP முறையை அறிமுகப்படுத்தியது.
Samayam Tamil atm


எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது OTP என்பது மோசடி கும்பல்களுக்கு எதிரான தடுப்பூசி போன்றது என எஸ்பிஐ வங்கி கூறுகிறது. இந்த OTP முறை எப்படி செயல்படுகிறது?

எஸ்பிஐ வாடிக்கையாளர் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அவரது மொபைலுக்கு OTP பாஸ்வோர்ட் வரும். அந்த OTP பாஸ்வோர்டை பதிவிட்ட பிறகே வாடிக்கையாளரால் பணம் எடுக்க முடியும். இதன் மூலம் பணத்தை வாடிக்கையாளர்தான் எடுக்கிறார் என்பதையும், மோசடிக்காரர்களின் தலையீடு இல்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.

PF பணம்.. இரண்டு முறை எடுக்கலாம்... எப்படி அப்ளை செய்வது?
OTP என்பது 4 இலக்க எண் ஆகும். எனினும், 10000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும்போது மட்டுமே OTP முறையில் பணத்தை எடுக்க வேண்டும். அதற்கு குறைவான தொகை எடுக்கும்போது OTP முறை தேவை இல்லை. வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், OTP முறையில் பணம் எடுப்பது பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்