ஆப்நகரம்

பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி?

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எப்படி சமாளிப்பது?

Samayam Tamil 26 Sep 2020, 2:07 pm
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பெரும்பாலானோருக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சமயத்தில் பிஎஃப் சேமிப்புப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம் என்ற எண்ணமும் இருக்கும். அதை எப்படி எடுப்பது, அதற்கான வழிமுறைகள் என்ன என்று பார்க்கலாம்...
Samayam Tamil how to withdraw your pf amount online easy steps here
பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி?


கொரோனா பாதிப்பால் சலுகை!

உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது என்று தெரியாமல் இருக்கலாம். அரசு வழங்கியுள்ள சலுகையின்படி, கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு உங்களது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் 75 சதவீதம் அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் சலுகைகளுக்குச் சமமான தொகையை நீங்கள் எடுக்கலாம். வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது சந்தாதாரர்களை சில நிபந்தனைகளின் கீழ் பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.

பணம் எப்போது கிடைக்கும்?

சம்பளம் பெறும் நபர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வலைத்தளம் - https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ மூலம் தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விண்ணப்பிக்கலாம். உங்களது கோரிக்கை உங்களது நிறுவனத்துக்கு ஒப்புதலுக்காக முதலில் அனுப்பப்படும். அதன் பின்னர் தகுதியான தொகை நேரடியாக உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தப் பணம் உங்களது வங்கிக் கணக்குக்கு வர 10 நாட்கள் வரை ஆகும். பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் யுஏஎன் அல்லது யுனிவர்சல் கணக்கு எண்ணை வழங்க வேண்டும். அல்லது நீங்கள் ஆதார் எண், பான் எண் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற தொடர்புடைய ஆவணங்களை அளிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

EPFO போர்ட்டலில் (https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/) உள்நுழைந்ததும், "online services" பிரிவின் கீழ் ”claim" என்ற வசதியில் "verify" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

உரிமைகோரல் படிவத்தைக் கொண்ட அடுத்த பக்கத்தில், உங்களது பிஎஃப் கணக்கில் கடைசி நான்கு இலக்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் "proceed for online claim" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்த பக்கத்தில் (படிவம் 31), திரும்பப் பெறுவதற்கான நோக்கம் மற்றும் விரும்பிய தொகை போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். இந்த கட்டத்தில் நீங்கள் முழு, பகுதி அல்லது ஓய்வூதியம் என்ற வகையில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படிவம் 31 அல்லது "PF advance" படிவத்தில் கீழ் தோன்றும் மெனுவில் "I want to apply for" விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துத் தொடர வேண்டும். பின்னர் "outbreak of pandemic (Covid-19)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

"get Aadhaar OTP" என்ற வசதியை கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்