ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு... மாநில அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் பென்சனர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதாக இமாச்சலப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2021, 7:36 pm
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலமாக அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இமாச்சலப் பிரதேச மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் பென்சனர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இச்சலுகை வழங்கப்படும் என்று இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாகுர் அறிவித்துள்ளார்.
Samayam Tamil DA


இந்த அறிவிப்பு மூலமாக அரசு ஊழியர்கள் மற்றும் பென்சனர்கள் ரூ.450 கோடி மதிப்பிலான நிதியுதவியைப் பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 2020 ஜனவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரையில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் அகவிலைப்படி உயர்வை அரசு விடுவித்துள்ளது.

முதலீடு 50 ரூபாய்... லாபம் 34 லட்சம்... தேசிய பென்சன் திட்டம்!
முன்னதாக மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான பென்சன் 15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேபோல அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் 28 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்