ஆப்நகரம்

உங்களுக்கு வேலை போயிருந்தாலும் கார் வாங்கலாம்... அது எப்படி?

வேலையை இழந்துள்ளவர்கள் ஹூண்டாய் கார் வாங்கினால் மூன்று மாதங்களுக்கான தவணைத் தொகையை நிறுவனமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 May 2020, 1:33 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மே 17 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் அடைந்து கிடக்கும் மக்களுக்கு வேலையும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. பலர் வேலையை விட்டே நீக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. பணியாளர்கள் பலரின் மாதச் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் சீராகும்வரை தொழில் துறையில் இதே நிலை நீடிக்கும் என்று கருதப்படுகிறது. வருமானம் இல்லாமல் போயுள்ளதால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் செலவிடுகின்றனர். நிதி நெருக்கடியால் கார், நகை, வீடு போன்றவற்றை வாங்கும் எண்ணம் மக்களிடையே குறைந்துள்ளது.
Samayam Tamil car


இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் சலுகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கார் வாங்க விரும்புபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பொருளாதார ரீதியாக ஆதரவளிக்கும் விதமாகவும் சிறப்புத் திட்டம் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, புதிதாக கார் வாங்கும் ஒருவர், தற்போது வேலையை இழந்தவராக இருந்தால் அவருக்கு மூன்று மாத ஈ.எம்.ஐ. தொகையினை ஹூண்டாய் நிறுவனமே செலுத்தும் என்று அறிவித்துள்ளது. இந்த மாதம் வாங்கும் அனைத்து புதிய ஹூண்டாய் கார்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும் எனவும், அதேநேரம், உயர் தர கார்களான கோனா, கிரேட்டா, எலாண்ட்ரா, டக்சன் போன்ற கார்களுக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கே வரும் மதுமானம்: ஆர்டர் பண்ண நீங்க ரெடியா?

இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள ஹூண்டாய் ஷோரூம்களில் மே 31ஆம் தேதிக்குள் இச்சலுகையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்கலாம். மூன்று மாத இலவசத் தவணைக்கான ஃபைனான்ஸ் திட்டம் ஸ்ரீராம் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த மாதத்தில் கார் வாங்குபவர்கள் ஆகஸ்ட் மாதம் வரையில் ஈ.எம்.ஐ. கட்டத் தேவையில்லை. கார் வாங்கச் செல்பவர்கள் வேலையை இழந்ததற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்