ஆப்நகரம்

ஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது!

ஜனவரி மாதத்திலிருந்து கார்களின் விலையை உயர்த்துவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 10 Dec 2019, 6:16 pm
கடந்த ஒரு வருடமாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இந்திய ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியுள்ளது. தேவை குறைவால் வாகன விற்பனை மந்தமானதால் வாகன உற்பத்தியை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் குறைத்து வந்தன. சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம்கூட வருவாய் இழப்பைச் சந்தித்தது. இதுபோன்ற சூழலில் நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் உற்பத்தி உயர்த்தப்பட்டது. மற்ற நிறுவனங்களும் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.
Samayam Tamil ஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது


புத்தாண்டு பிறக்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வாகன உற்பத்திச் செலவுகள் மீதான சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் முனைப்பில் வாகனங்களின் விலையை உயர்த்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன. அதன்படி, ஜனவரி மாதத்திலிருந்து கார்களின் விலையை உயர்த்தப்போவதாக மாருதி சுஸுகி நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தன. இதுபோன்ற சூழலில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

புத்தாண்டிலிருந்து மாருதி கார் வாங்குறது கஷ்டம்!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், வாகனச் சந்தையில் 16.2 சதவீதப் பங்குகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. கிரெட்டா, எலாண்ட்ரா, டக்ஸன், எலைட் ஐ20, ஐ20 ஆக்டிவ், வெர்னா, சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10, எக்ஸெண்ட், இயான் ஆகிய 10 மாடல்களை இந்நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. மேற்கூறிய அனைத்து கார்களின் விலையும், அதன் எஞ்சின் தரம், மாடலைப் பொறுத்து ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இனி டாடா காரையும் வாங்க முடியாது போலயே!!

ஹூண்டாய் நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனையைப் பொறுத்தவரையில், 2 சதவீத உயர்வுடன் மொத்தம் 44,600 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது தவிர 15,900 கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்திருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்