ஆப்நகரம்

இந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம்

இந்தியாவில் சேவைகள் பிரிவில் பணியாற்றும் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஐபிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதில் பணியாற்றுப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2019, 6:17 pm
உலகின் முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம், இந்தியாவில் செயல்பட்டு வரும் மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவில் ஐபிஎம்
நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவில் ஐபிஎம்


ஐபிஎம் நிறுவனம் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையை செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கு எடுத்துச் செல்லும் ஆயத்தங்களில் இறங்கியுள்ளது. அதனால் பல ஊழியர்களை வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் மென்பொருள் பிரிவில் பணியாற்றும் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப திறன் படைத்தவர்களை புதியதாக பணிக்கு எடுக்க உள்ளதாக ஐபிஎம் அறிவித்துள்ளது.

இதுபோன்று புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது ஐடி ஊழியர்கள் வேலை இழப்பது சாதாரனம் தான். எனினும், அவர்கள் புதிய திறன்களோடு வரும் போது மீண்டும் பணியமர்த்தப்படுவது இயல்பான ஒன்றுதான்.

பல நிறுவனங்களும் இதை பின்பற்றி வருகின்றன. அதையே தான் தற்போது ஐபிஎம் நிறுவனமும் மேற்கொள்ளவுள்ளது. எனினும், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் புதிய திறனுடன் வரும்போது அவர்கள் மீண்டும் பணியமர்த்தவும் ஐபிஎம் திட்டமிட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனத்தின் இந்த முயற்சியால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிகிறது. எனினும், மாற்றத்தை வேகமான வளர்ச்சி மூலம் ஈடுசெயப்படும் என்பது ஐபிஎம் நிறுவனத்தின் மறுமொழியாக உள்ளது.

பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அளிப்பதற்கான செலவீனங்கள் அதிகமாக இருக்கிறது. மனித வளத்துறையும் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. இதன் காரணமாக புதிய ஊழியர்களி பணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்