பணம் யாரிடம் கேட்பது?
நம்மில் பலருக்கு பணத் தேவை அடிக்கடி ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் பலர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது நண்பர்களிடத்தில் பணம் கேட்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் அது பிரச்சினையில் முடிந்துவிடும். தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பணம் கேட்பதற்கு சில நேரம் வெட்கப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கியில் கடன் வாங்குவதுதான் சரி என்று நினைப்பார்கள்.
வங்கியில் கடன்!
வங்கிகளில் கடன் வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. உங்கள் CIBIL ஸ்கோர் நன்றாக இருந்தால் வங்கி உங்களுக்கு கடனை வழங்கும். இருப்பினும், ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுக்கலாம். இது தவிர, உங்களுடைய CIBIL ஸ்கோர் சரியில்லை என்றாலும் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்காது.
எவ்வளவு கிடைக்கும்?
கடனை வழங்குவதற்கு முன், கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் எவ்வளவு சம்பாதிக்கிறார், கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும் என்பதை அந்த வங்கி சரிபார்க்கும். இதற்குப் பிறகுதான் வங்கி தரப்பிலிருந்து கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. நாம் எவ்வளவு கடன் கேட்டாலும் நமக்கு எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என்பதை வங்கிதான் முடிவு செய்யும்.
ஆவணங்கள் முக்கியம்!
விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்கும்போது மட்டுமே வங்கி கடனை வழங்குகிறது. இந்த அத்தியாவசிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த வங்கி உங்களுக்குக் கடன் வழங்க மறுக்கலாம். சில நேரம் விண்ணப்பதாரருக்கு ஒரு ரூபாய் கூட கடன் கிடைக்காது. ஆவணங்கள் மற்றும் சிபில் ஸ்கோர் முக்கியம்.
என்னென்ன தேவை?
சம்பளம் வாங்குபவர்களுக்கான தனிநபர் கடனுக்கு தேவையான ஆவணங்கள்:
- அடையாளச் சான்று
- வசிப்பிடச் சான்று
- சம்பளம் எடுக்கப்பட்ட வங்கிக் கணக்கின் கடைசி 3 மாதங்களின் வங்கி விவரங்கள்
- கடந்த 3 மாத சம்பள சீட்டு
- 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
கார் கடன்!
சம்பளம் வாங்குபவர்கள் கார் கடனுன் பெறத் தேவையான ஆவணங்கள்:
- அடையாளச் சான்று
- இருப்பிடச் சான்றிதழ்
- பயன்பாட்டு பில்
- வயதுச் சான்று
- சம்பள விபரம்
- 3 முதல் 6 மாதங்கள் வங்கி அறிக்கை
- கையொப்ப சரிபார்ப்பு சான்று
- ப்ரோஃபார்மா இன்வாய்ஸ் (விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த காருக்கான டீலரால் குறிப்பிடப்பட்ட விலை இந்த ஆவணத்தில் இருக்கும். காரின் மதிப்பின் அடிப்படையில் கடன் தொகை இருக்கும்)