ஆப்நகரம்

ஊரடங்கு உத்தரவு: இந்தியாவைப் பாராட்டும் ஐஎம்எஃப்!

துணிச்சலுடன் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

Samayam Tamil 16 Apr 2020, 9:08 pm
சீனாவில் தொடங்கி மெல்ல மெல்ல மற்ற நாடுகளையும் பாதிக்கத் தொடங்கிய கொரோனா வைரஸிடமிருந்து நாட்டு மக்களைக் காக்கும் முயற்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. உலகின் மற்ற நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்த சூழலில் இந்திய அரசு மிகவும் துணிச்சலோடு மக்கள் ஊரடங்கு உத்தரவை வெளியிட்டது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மே 3 வரையில் நீட்டிக்கப்பட்டது.
Samayam Tamil ஊரடங்கு உத்தரவு_ இந்தியாவைப் பாராட்டும் ஐஎம்எஃப்


நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே பாதுகாப்புடன் இருக்கும்படி வலியுறுத்திய மத்திய அரசு, தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் இழுத்து மூடும்படி உத்தரவிட்டது. பொதுவெளிகளில் மக்கள் அதிகமாகக் கூடக்கூடாது என்பதற்காக திரையரங்குகள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. தொழிலாளர்கள் பலர் தங்களது வேலையை இழந்தனர். பலருக்குச் சம்பளம் கிடைக்கவில்லை.

வாகன காப்பீட்டு அவகாசம் நீட்டிப்பு: எப்போது வரை தெரியுமா?

இந்தியப் பொருளாதாரமே பெரும் தேக்கநிலையில் இருக்கிறது. மத்திய அரசின் இந்நடவடிக்கைகள் ஒரு தரப்பில் விமர்சிக்கப்பட்டாலும் நாட்டு மக்களின் நலனிலும் அவர்களின் உயிர் மீதும் அக்கரை கொண்டே மத்திய அரசு இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இப்போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கைகோர்த்துள்ளனர். நாட்டு மக்களின் உயிரைக் காட்டிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி முக்கியம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அரசு தரப்பிலிருந்து மக்களுக்குப் பல்வேறு பொருளாதாரச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மோடியைச் சந்தித்த நிர்மலா: நல்லது நடக்குமா?

இந்நிலையில் இந்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குநரான சங்யாங் ரீ, ஏப்ரல் 15ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையானது மிகவும் துணிச்சல் மிக்க புத்திசாலித்தனமான முடிவு என்று பாராட்டியுள்ளார். இந்நடவடிக்கையால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்றாலும் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் இந்த நடவடிக்கை மிகவும் அத்தியாவசியமான ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார்.

கொரோனா: ரயில்வே துறைக்கு ரூ.650 கோடி நஷ்டம்!

சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், 5.8 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்