ஆப்நகரம்

நெருங்கும் உலக பொருளாதார நெருக்கடி.. ஏழை மக்களுக்குதான் ஆபத்து.. எச்சரிக்கும் IMF!

உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏழை மக்கள் மற்றும் ஏழை நாடுகளுக்கு ஆபத்து என IMF எச்சரித்துள்ளது.

Samayam Tamil 7 Oct 2022, 12:23 pm
உலகமே பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், ஆபத்தான சூழலை தடுக்க கொள்கை நடவடிக்கை தேவை எனவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. மேலும், உலக பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பையும் குறைக்கப்போவதாக சர்வதேச நாணய நிதியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil imf


இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, “உலகப் பொருளாதாரமே அடிப்படையில் பெரும் மாற்றத்தை சந்திப்பதை பார்க்கிறோம். கணிக்கப்படக்கூடியதாக இருந்த உலக பொருளாதாரம் இப்போது பலவீனமாகவும், அதிக பொருளாதார ஏற்ற இறக்கங்களுடனும், அரசியல் மோதல்களாலும், இயற்கை பேரழிவுகளாலும் மாறிவிட்டது.

ஐரோப்பா, சீனா, அமெரிக்கா ஆகிய உலகின் அனைத்து பெரிய பொருளாதாரங்களின் வேகமும் இப்போது குறைந்துவிட்டது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களிலும் ஏற்றுமதிக்கு டிமாண்ட் குறைந்துவிட்டது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஏற்கெனவே உணவு விலை மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வாக உள்ளது.

Indian Rupee: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. இப்போ எவ்வளவு தெரியுமா?
உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை வைத்திருக்கும் நாடுகள் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தொடர்ந்து பொருளாதார சரிவை சந்திப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி பெற்றாலும் கூட அது பொருளாதார நெருக்கடியை போல தோன்றும். ஏனெனில், மக்களின் உண்மையான வருமானம் குறைகிறது, விலைவாசி உயருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின் ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகள், ரஷ்யாவை எதிர்க்கும் நாடுகள் என இரு தரப்புகளாக பிரிந்துள்ளனர். உலகத்தை இப்படி உடைவதற்கு நாம் அனுமதிக்க முடியாஹ்டு. இதேபோன்ற நிலை தொடர்ந்தால், பணக்கார நாடுகளில் உள்ள ஏழை மக்களும், ஏழை நாடுகளுமே அதிகம் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்