ஆப்நகரம்

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட்: மக்களே உஷார்!

இன்று ஒரு நாள் மட்டும் யோனோ தளங்களில் இடையூறு ஏற்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 8 Nov 2020, 3:41 pm

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக்கு நாடு முழுவதும் 40 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
Samayam Tamil Yono App


எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலம் பணப் பரிவர்த்தனை, கடன் உள்ளிட்ட ஏராளமான வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். யோனோ மற்றும் யோனோ லைட் என இரண்டு ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பேங்கிங் சேவைகளை எஸ்பிஐ வழங்கி வருகிறது.

டிஜிட்டல் பேங்கிங் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்காக ஏராளமான சலுகைகளையும் யோனோ ஆப் மூலமாக எஸ்பிஐ வழங்கி வருகிறது. உதாரணமாக, யோனோ ஆப் மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட சில கடன்களுக்கு விண்ணப்பித்தால் வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது.

ஒரே பிரீமியம் போதும்: வாழ்நாள் முழுவதும் பென்சன் வரும்!

இந்நிலையில், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இன்று யோனோ தளம் அப்கிரேட் மோடுக்கு கொண்டுசெல்லப்படுவதாக எஸ்பிஐ வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் INB, YONO, YONO lite ஆகிய தளங்களில் இன்று (நவம்பர் 8) மட்டும் சில சிக்கல்கள், இடையூறுகள் ஏற்படலாம் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

நாளை முதல் யோனோ தளங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். அதன்பின்னர் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, இன்று ஒரு நாள் மட்டும் யோனோ இடையூறுகளை பொறுத்துக்கொள்ளும்படி எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

இடையூறுகளை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் இன்று ஒருநாள் மட்டும் யோனோ ஆப்புக்கு பதிலாக போன்பே, கூகுள்பே போன்ற மற்ற தளங்களை பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்