ஆப்நகரம்

பழைய பென்சன் திட்டம்.. ஒவ்வொரு மாதமும் போராட்டம்.. CPS ஒழிப்பு இயக்கம் முடிவு!

என்ன செய்யப் போகிறார் தமிழக முதல்வர்?

Samayam Tamil 2 Apr 2023, 8:59 pm
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்த முடிவை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் எடுத்துள்ளது.
Samayam Tamil important decision taken by tamil nadu cps abolition movement for old pension scheme
பழைய பென்சன் திட்டம்.. ஒவ்வொரு மாதமும் போராட்டம்.. CPS ஒழிப்பு இயக்கம் முடிவு!


பழைய பென்சன் திட்டம்!

தமிழக அரசு ஊழியர்களின் நிறைவேற்றப்படாத நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தி விட்ட நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. அரசு தரப்பிலிருந்தும் சரியான முடிவு தெரியவில்லை.

​சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்!​

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் போராடி வருகின்றர். இவர்கள் பல்வேறு போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி அரசுக்கு பழைய பென்சன் திட்டம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.

அடம் பிடிக்கும் அரசு!

பழைய பென்சன் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தினால் நிதிச் சுமை ஏற்படும் போன்ற காரணங்களைக் கூறி தமிழக அரசு காலம் தாமதித்து வருகிறது. பின்னர் ஏன் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தது என தமிழக அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆலோசனைக் கூட்டம்!

CPS ஒழிப்பு இயக்க மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 2) மதுரையில் மாநில ஒருங்கிணைப்பாளர்
S ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் P பிரெடரிக் எங்கெல்ஸ் எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை முன்மொழிந்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் மு. செல்வகுமார் நிறைவுரையாற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.

உண்ணா விரத போராட்டம்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட போராட்டங்கள் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 17ஆம் தேதி திங்கள் அன்று மாவட்ட அளவில் பேரணி நடத்துவது எனவும், மே 19ஆம் தேதி அன்று CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநிலம் அல்லது 2 இடங்களில் (எண்ணிக்கையை பொறுத்து) உண்ணாவிரதம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

​தற்செயல் விடுப்பு!

ஜூன் 27ஆம் தேதி செவ்வாய் அன்று
ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொது சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்