ஆப்நகரம்

ரேஷன் கார்டு உடனே கிடைக்கும்.. நீங்கள் இதைச் செய்தால் போதும்!

ரேஷன் கார்டு உங்க கிட்ட இல்லையா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Samayam Tamil 15 Aug 2022, 5:58 pm
உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் கவலையே வேண்டாம். அதை ஈசியா எப்படி வாங்குவது என்று இங்கே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Samayam Tamil important facility to tamil nadu ration card holders easy way to get back your lost ration card online
ரேஷன் கார்டு உடனே கிடைக்கும்.. நீங்கள் இதைச் செய்தால் போதும்!


ரேஷன் கார்டு!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே, ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாக உள்ளது.

விதிமுறைகள்!

ரேஷன் கார்டு விஷயத்தில் நிறைய விதிமுறைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தகுதியானவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். தகுதியில்லாதவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதால் தகுதியுள்ளவர்களுக்கு பலன் கிடைக்காமல் போகிறது. இதனால் நிறையப் பேரின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வருகின்றன.

தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

உங்களுடைய ரேஷன் கார்டை ஒருவேளை கவனக்குறைவால் தொலைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும். யாரிடம் கேட்பது, என்ன செய்வது, எப்படி திரும்ப வாங்குவது என்றெல்லாம் யோசிப்பீர்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய ரேஷன் அட்டை நகலை ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம்.

இப்படி வாங்கலாம்!

  • 1. நீங்கள் முதலில் https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
  • 2. உள்ளே சென்றதும் உங்கள் பயனாளர் IDஐ பதிவிட வேண்டும்.
  • 3. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
  • 4. இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் ஓப்பன் ஆகும்.
  • 5. அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து அதை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  • 6. இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

ஆதார் கார்டு!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியோடு முடிந்துவிட்ட நிலையில், நிறையப் பேர் இணைக்காமல் உள்ளனர். ரேஷன் கார்டில் மோசடி நடைபெறுவதைத் தடுக்க ஆதார் இணைப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்