ஆப்நகரம்

உங்க PF கணக்குக்கு ஆபத்து.. முக்கியமான விதிமுறை!

செயல்படாத பிஎஃப் கணக்கில் உள்ள பணத்துக்கு வட்டி கிடைக்குமா? மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

Samayam Tamil 13 Mar 2022, 4:41 pm
சம்பளம் வாங்கும் நபர்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) திட்டத்தின் சேமிக்கும் பணம் அவர்களின் வாழ்நாள் வருமானம் ஆகும். எனவே பிஎஃப் தொடர்பான விதிமுறைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் பணியில் இருக்கும் வரை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்வீர்கள். நீங்கள் ஓய்வு பெறும்போது உங்களிடம் கணிசமான தொகை கையில் இருக்கும். இதன் மூலம் உங்களுடைய கடைசி காலத்தை கஷ்டம் இல்லாமல் கழிக்கலாம்.
Samayam Tamil pf


ஆனால் பல சமயங்களில் பிஎஃப் தொடர்பான விதிமுறைகள் பற்றித் தெரியாமலோ அல்லது சில தவறுகள் காரணமாகவோ பிஎஃப் கணக்கு மூடப்பட்டுவிடும். எனவே நீங்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பிஎஃப் தொடர்பான சில முக்கியமான விதிமுறைகள் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது.

நீங்கள் இதற்கு முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு உங்களுடைய பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களுடைய பிஎஃப் கணக்கில் 36 மாதங்களுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால் இந்தக் கணக்கு மூடப்பட்டுவிடும். எனவே புதிய நிறுவனத்துக்கு உங்களுடைய பிஎஃப் கணக்கை மாற்றிவிட வேண்டும்.

பிஎஃப் கணக்கு ஆக்டிவேட் ஆனவுடன் நீங்கள் பரிவர்த்தனை செய்ய முடியாது. கணக்கை மீண்டும் செயல்பட வைக்க பிஎஃப் அலுவலகத்துக்கு நீங்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். கணக்கு செயல்படாமல் இருந்தாலும் கணக்கில் கிடக்கும் பணத்திற்கு வட்டி தொடர்ந்து வரும். எனவே கவலைப்படத் தேவையில்லை. இதற்கு முந்தைய விதிமுறைப்படி கணக்கில் இருக்கும் பணத்துக்கு வட்டி கிடைக்காது. ஆனால் 2016ஆம் ஆண்டில் இந்த விதிமுறை திருத்தப்பட்டது.

பிஎஃப் அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செயலற்ற கணக்குகள் தொடர்பான உரிமை கோரல்களை (கிளைம்) தீர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மோசடி தொடர்பான ஆபத்து குறைக்கப்படுவதையும், உரிமை கோருபவர்களுக்கு கிளைம் தொகை செலுத்தப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

PF வட்டி குறைப்பு.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!
செயல்படாத பிஎஃப் கணக்குகள் தொடர்பான கோரிக்கையை தீர்க்க, அந்த கோரிக்கையை பணியாளரின் முதலாளி (நிறுவனம்) சான்றளிக்க வேண்டியது அவசியமாகும். ஒருவேளை நிறுவனம் மூடப்பட்டு, உரிமைகோரலைச் சான்றளிக்க யாரும் இல்லை என்றால், KYC ஆவணங்களின் அடிப்படையில் வங்கி தரப்பில் சான்று அளிக்கப்படும்.

ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ESI அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை அடங்கும் KYC சரிபார்ப்புக்கு தேவைப்படும். இது தவிர, அரசு தரப்பில் வழங்கப்படும் வேறு எந்த அடையாள அட்டையையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்