ஆப்நகரம்

தபால் நிலையங்களில் நிதி மோசடி: தடுக்க நடவடிக்கை!

தபால் நிலையங்களில் அதிகரித்து வரும் நிதி மோசடிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள்...

Samayam Tamil 28 Jan 2022, 9:20 pm
சமீப காலமாக பல்வேறு தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்குகளில் நிறைய மோசடிகள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் இந்திய தபால் துறை இறங்கியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
Samayam Tamil post office


2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதலே தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் மொபைல் நம்பரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, பான் கார்டையும் தபால் நிலைய கணக்குகளில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் மோசடிகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். அரசு சேமிப்பு மேம்பாட்டு பொது விதிமுறை 2018, விதி 6(பி)-இன் படி, தபால் நிலையத்தில் புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்குபவர்கள் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் நிதி மோசடிகளோ அல்லது வேறு வகையிலான மோசடிகளோ நடைபெறாமல் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அது குறித்து கீழே பார்க்கலாம்...

>> சேமிப்பு கணக்குகளில் பான் எண், மொபைல் நம்பரை இணைக்க வேண்டும்.

>> ரூ.20,000க்கு மேல் பணம் அனுப்பும்போதும், பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.

>> ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

>> தபால் நிலைய கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.

>> பான் கார்டு இல்லாத வாடிக்கையாளர்களிடம் படிவம் 60/61 வாங்கப்பட வேண்டும்.

>> கணக்குதாரர் தங்களுடைய மொபைல் நம்பரை மாற்றுவதாக இருந்தால் அது குறித்து தனியாக எழுதி வாங்க வேண்டும்.

>> தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளை மூடும்போது அதற்கான பாஸ்புக்கை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கிவிட வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்