ஆப்நகரம்

விவசாயிகளுக்கு அடுத்த 2000 ரூபாய்.. இந்த தேதியில் வருது!!

பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 10 Mar 2022, 3:03 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் அடுத்த மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவிருக்கிறது. ஆனால், பல விவசாயிகளின் கணக்குகளில், FTO உருவாக்கப்பட்டு, பணம் செலுத்துவதற்கான நிலை நிலுவையில் உள்ளது. FTO என்பது Fund Transfer Order. உங்களுடைய கணக்கிலும் இப்படி உள்ளதா என்பதை சீக்கிரம் பாருங்கள். இல்லையெனில் அடுத்த மாதம் உங்கள் கணக்கில் பணம் வராமல் போக வாய்ப்புள்ளது.
Samayam Tamil pm kisan


2022 ஜனவரி 1ஆம் தேதியன்று, மத்திய மோடி அரசு பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணை பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாற்றியது. தற்போது அடுத்த தவணைப் பணம் (ரூ.2000) ஏப்ரல் மாதம் விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம் கிசான் 11ஆவது தவணை: பெயர் சேர்ப்பது எப்படி?
பிஎம் கிசான் பணம் வங்கிக் கணக்கில் வரும்போது அதன் நிலையை விவசாயிகள் சரிபார்க்க வேண்டும். பல விவசாயிகள் இன்னும் தங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றும், சிலருக்கு FTO உருவாக்கப்பட்டு, பணம் வருவதற்கான உறுதிப்படுத்துதல் நிலுவையில் இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். உங்களுக்கும் அப்படி இருந்தால் கவலை வேண்டாம்! உங்கள் பணம் கண்டிப்பாக வந்துசேரும்.

FTO உருவாக்கப்பட்டுவிட்டது என்றால், உங்கள் முழுமையான தகவல் சரிபார்க்கப்பட்டு, சில நாட்களுக்குள் கிசான் சம்மன் நிதியின் பணம் உங்களுக்கு மாற்றப்பட்டுவிடும் என்று அர்த்தம். இதுகுறித்த தகவலை நீங்கள் தெரிந்துகொள்வதற்கு பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று பார்க்கலாம். வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவே உங்களுடைய ஸ்டேட்டஸ் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்