ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அது கிடைக்கப் போகுது! நீண்ட நாள் காத்திருப்பு பலன்?

மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் 2 லட்சம் வரவிருக்கிறது. 18 மாதம் நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகை வரும் தேதி இதுதான்.

Samayam Tamil 30 Nov 2022, 9:35 am
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உண்மையில், 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தும் தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய முழு விவரம் இதோ...
Samayam Tamil da


18 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து இம்முறை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அமைச்சரவை செயலாளருடனான பேச்சுவார்த்தைக்கான நேரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த முறை அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கையுடன் உள்ளனர்.

உண்மையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து தொடர்ந்து கோக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த முடிவையும் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இதை அரசு ஒப்புக்கொண்டு, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகையை வழங்கினால், ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வந்து சேரும்.

இப்போது ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரும் என்பதைப் பற்றி பேசலாம். ஜேசிஎம் (பணியாளர்கள் தரப்பு) தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா கருத்துப்படி, வெவ்வேறு ஊழியர்களுக்கு வெவ்வேறு நிலுவைத் தொகை உள்ளது. லெவல்-1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். அதே சமயம் லெவல்-13க்கு (7வது சிபிசி அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ.2,15,900 அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) ஒரு ஊழியரின் டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும்.

கருப்பு பொங்கல்தான் கொண்டாடுவோம்.. முதல்வருக்கு தமிழக அரசு ஊழியர்கள் கடிதம்!!

கொரோனா காலத்திற்குப் பிறகு, மத்திய அரசு 2020 ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை இன்னும் கிடைக்கவில்லை. முடக்கப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், மறுபுறம், ஊழியர்கள் அமைப்புகளின் கோரிக்கைகளால், அரசாங்கத்துக்கு அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் விரைவில் இது குறித்து முடிவெடுக்கும் என்று ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதற்கான ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபடவிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்