ஆப்நகரம்

பர்னிச்சர் விற்பனையில் அதிக கவனம் செலுத்தும் பிளிப்கார்ட்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது பர்னிச்சர் சந்தையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Samayam Tamil 17 Feb 2019, 10:09 am
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது பர்னிச்சர் சந்தையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
Samayam Tamil Flipkart


ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது பிளிப்கார்ட். வீட்டிற்கு தேவையான உபகரணங்கள் முதல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள், கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைனில் பர்னிச்சர் விற்பனையை தொடங்கி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், ஆன்லைன் பர்னிச்சர் வளர்ச்சி 200 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த கிரெடாய் வீட்டு உபயோகக் கண்காட்சியில் முதல் முறையாக பிளிப்கார்ட் நிறுவனம் தன்னை விளம்பரதாரராக இணைத்துக் கொண்டுள்ளது. ஆன்லைன் பர்னிச்சர் வர்த்தக பிரிவின் இயக்குனர் காஞ்சன் மிஸ்ரா இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில், பர்னிச்சரை பொறுத்தவரையில் ஆன்லைனில் ஈடுபடும் நிறுவனங்கள் மிக மிக குறைவு. ஆனால், பிளிப்கார்ட் ஆன்லைன் மூலம் விற்பனையாகும் பர்னிச்சர்களுக்கு இந்த நிறுவனங்கள் உத்தரவாதம் அளிக்கும்.

அதோடு, வெளி மாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வருவதற்கு குறைவான செலவில் அனைத்து யுக்திகளையும் கையாண்டு பர்னிச்சர்களை சரியான முறையில் டெலிவரி செய்யும். வாடிக்கையாளர் விருப்பப்படி அவர்களது வீட்டில் அசெம்பிள் செய்து தரப்படும்.

தமிழகத்தில் பர்னிச்சர் விற்பனையாளர்களில் 60 சதவீதம் பேர் சென்னை நிறுவனங்கள் தான். தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து தங்கள் நிறுவனங்களில் தான் பர்னிச்சர் ஆர்டர் செய்கின்றனர். இனி வரும் ஆண்டுகளில் பர்னிச்சர் விற்பனையின் வளர்ச்சி பிளிப்கார்ட் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்