ஆப்நகரம்

வருமான வரித் துறை எச்சரிக்கை.. இதை செய்தால் உங்கள் பணத்துக்கு ஆபத்து!

வருமான வரித் துறை பெயரில் லாட்டரி பணம் கிடைக்கும் என பரவி வரும் தகவல் குறித்து வருமான வரித் துறை எச்சரிக்கை.

Samayam Tamil 21 May 2022, 12:13 pm
நாட்டில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. வங்கிகள், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு என யாரையும் விட்டுவைக்காமல் பல பெயர்களில் மோசடி கும்பல்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றன.
Samayam Tamil scam


இந்நிலையில், வருமான வரித் துறை பேரிலும் தற்போது மோசடி கும்பல்கள் ஆட்டையை போட தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் மோசடி கும்பல்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

வருமான வரித் துறை ஒரு லாட்டரி குலுக்குச் சீட்டு போட்டி நடத்துவதாகவும், அதில் வெற்றிபெறுவோருக்கு நிறைய பணம் கிடைக்கும் எனவும் இமெயில்களை அனுப்பி வருகின்றனர் மோசடி கும்பல்கள். இந்நிலையில், இது மோசடி கும்பல்களின் வேலைதான் என மத்திய அரசு தரப்பிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காய்கறி, பால் கூட வாங்குவதில்லை.. மிடில் கிளாஸ் மக்கள் திணறல்.. ப.சிதம்பரம் விளாசல்!
இதுகுறித்து மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், வருமான வரித் துறை எந்தவொரு லாட்டரி போட்டியும் நடத்தவில்லை எனவும், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இதுகுறித்து வருமான வரித் துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “வருமான வரித் துறை பெயரில் பரப்பப்படும் பொய் தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். உங்களின் தனிநபர் விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்