ஆப்நகரம்

வருமான வரி: பணம் அனுப்பியாச்சு.. உங்களுக்கு வந்துருச்சா!

1.62 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ரீஃபண்ட் அனுப்பியுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் தகவல்.

Samayam Tamil 27 Jan 2022, 5:49 pm
வரி செலுத்துவோருக்கு 1.62 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீஃபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி 24ஆம் தேதி வரை 1.79 கோடிக்கு மேற்பட்டோருக்கு 1.62 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீஃபண்ட் செலுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil income tax


வருமான வரித் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், “2021 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 24ஆம் தேதி வரை 1.79 கோடி பேருக்கு 1,62,448 கோடி ரூபாய் ரீஃபண்ட் தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியுள்ளது.

இதில் 1,77,35,899 பேருக்கு 57,754 கோடி ரூபாய் வருமான வரி ரீஃபண்ட் தொகையும், 2,23,952 நிறுவனங்களுக்கு 1,04,694 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி ரீஃபண்ட் தொகையும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் புதிய அவதாரம்.. டாடா குழுமத்திடம் ஒப்படைத்த அரசு!
இதில் 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (Assessment year) 27,111.40 கோடி ரூபாய் ரீஃபண்ட் தொகையும் செலுத்தப்பட்டுவிட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்