ஆப்நகரம்

சுதந்திர தினம்: பணச் சுதந்திரம் அடைவது எப்படி? 6 நச் வழிகள்!

நீங்கள் பணச் சுதந்திரத்தை அடைவதற்கு ஆறு முக்கிய வழிகள்.

Samayam Tamil 15 Aug 2022, 3:11 pm
இன்று இந்தியாவின் 76ஆவது சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், ஒவ்வொரு நபரும் பணச் சுதந்திரத்தை அடைவது எப்பை என்பதை பார்க்கலாம். பலருக்கும் பணச் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், எப்படி தொடங்குவது என்பது தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு சிறு வழிகாட்டல் இதோ.
Samayam Tamil money


முதலில் பட்ஜெட்

ஒவ்வொரு நபரும் முதலில் பட்ஜெட் போட வேண்டியது அவசியம். பணச் சுதந்திரத்துக்கான பாதையில் முதல் படி பட்ஜெட். உங்களுக்கு எவ்வளவு பணம் வருகிறது, எவ்வளவு பணம் செலவாகிறது என்பதையெல்லாம் கணக்கிட வேண்டும்.

சேமிப்பு

பட்ஜெட்டில் வரவு, செலவை கணக்கிட்ட பின், மாதம் தோறும் சம்பளம் வந்ததும் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கு ஒதுக்கிவிட வேண்டும். முதலில் சேமிப்புக்கு பணத்தை ஒதுக்கிவிட்டு மீத தொகைக்குள் செலவை அடக்க வேண்டும்.

முதலீடு

சேமித்த தொகையை சும்மா வைத்திருந்தால் பயனில்லை. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயருகிறது. ரூபாய் மதிப்பு குறைகிறது. எனவே பணத்தை பெருக்க அதை முதலீடு செய்ய வேண்டும். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ரெகரிங் டெபாசிட் (Recurring Deposit) போன்ற தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுப்பவர்கள் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதுபோக தங்கத்திலும் முதலீடு செய்யலாம்.

75 ஆண்டுகளில் இந்திய ரூபாய் சரிந்தது எவ்வளவு தெரியுமா?
காப்பீடு

உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் மருத்துவக் காப்பீடு, டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) போன்றவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.

எமர்ஜென்சி நிதி

ஒவ்வொரு நபரும் சேமிப்பு போக எமர்ஜென்சி நிதி உருவாக்க வேண்டும். எமர்ஜென்சி நிதி என்பது உங்களுக்கு வேலை இல்லாவிட்டாலும் 6 மாதங்களுக்கான செலவை சமாளிக்க தேவையான தொகையாகும். உதாரணமாக உங்கள் மாத சம்பளம் 30000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். 6 மாதங்களுக்கு என கணக்கிட்டால் உங்கள் எமர்ஜென்சி நிதியில் 1.8 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். இதை சிறு சிறுக சேமித்தாலும் போதும். கொரோனா பாதிப்பின்போது பலரும் வேலையை இழந்தனர். இதுபோன்ற சூழல்களில் எமர்ஜென்சி நிதி கைகொடுக்கும்.

ஓய்வுக்கால நிதி

இதுபோக நீங்கள் பணி ஓய்வுபெற்ற பின் வருமானம் ஈட்டுவதற்காக தனியாக ஓய்வுக்கால நிதி சேமிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஓய்வுக்கால நிதிக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலேயே முதலீடு செய்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்