ஆப்நகரம்

சீனாவில் இருந்து பால், செல்ஃபோன் இறக்குமதி செய்ய தடை!

சீனாவில் இருந்து மலிவு விலையில் அதேசமயம் கலப்படம் நிறைந்த பால் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

PTI 25 Apr 2016, 6:23 pm
சீனாவில் இருந்து மலிவு விலையில் அதேசமயம் கலப்படம் நிறைந்த பால் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Samayam Tamil india bans import of milk some mobile phones from china
சீனாவில் இருந்து பால், செல்ஃபோன் இறக்குமதி செய்ய தடை!


இதனை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் தரம் மிகவும் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதேபோன்று, சர்வதேச அடையாள குறியீட்டு எண் இல்லாத, சீன செல்ஃபோன்கள் புழக்கத்தில் உள்ளதால், தீவிரவாத அச்சுறுத்தல் நிலவுகிறது. இத்தகைய செல்ஃபோன் மற்றும் பால் இறக்குமதி செய்வதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

எனினும், சீன இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது என்றும், உலக வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ், ஏதேனும் சில பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்