ஆப்நகரம்

மறுபடியும் வேலைக்கு போகணுமா.... பதறும் பணியாளர்கள்!

ஊரடங்கு முடிந்த பின்னர் மீண்டும் வேலைக்குச் செல்வதில் 93 சதவீத ஊழியர்கள் தயக்கமுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 6 May 2020, 5:47 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரையில் 1,694 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 49,391 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17 வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. வேலையையும் வருமானத்தையும் இழந்துள்ள பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சில துறைகளில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கின்றனர்.
Samayam Tamil office


ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு சில துறைகளில் சில கட்டுப்பாடுகளோடு நிறுவனங்கள் இயங்க அனுமதி கிடைத்தது. வேளாண்மை உள்ளிட்ட தொழில்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் மக்களிடையே கொரோனா தொற்று அச்சம் இன்னமும் குறையவில்லை. வாழ்வாதாரத்துக்காக வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்தாலும் உயிரைக் காக்க வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதும் அவசியமாகிறது. இதுபோன்ற வாழ்வா சாவா சூழலில் பெரும்பாலான தொழிலாளர்கள் உள்ளனர்.

பங்குகளை விற்று நிதி திரட்டும் மத்திய அரசு! ரூ.22,000 கோடிக்கு திட்டம்!

இந்நிலையில், 93 சதவீதப் பணியாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வதில் மன அழுத்தத்துடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் மைண்ட் மேப் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சமூகப் பாதுகாப்பு பொறுப்பு நிதித் திட்டத்தைப் போலவே, கார்பரேட் சுகாதாரப் பொறுப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி தொழிலாளர்களின் சுகாதாரத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். வேலை பார்க்கும் அலுவலகத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டும் என்று 85 சதவீதப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 560 பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 85 சதவீதப் பேர் ஆண்களும் 15 சதவீதப் பேர் பெண்களும் ஆவர். மீண்டும் வேலைக்குச் செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும் கொரோனாவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் வேலைக்குச் செல்லத் தயங்குவதாக இந்த ஆய்வில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் சிறிது காலம் வீட்டில் இருந்து வேலை பார்க்க விரும்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்