ஆப்நகரம்

நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. வளரும் பொருளாதாரம்!

5 லட்சம் கோடி டாலர் இலக்கை அடையும் பாதையில் இந்தியா சென்றுகொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Apr 2022, 1:25 pm
2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை பிறகிலிருந்தே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி, 2020ஆம் ஆண்டில் கொரோனா என நிறைய தடைகளையும் சவால்களையும் இந்தியா சந்தித்தது. 2021ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாம் அலை வீசி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், இந்த ஆண்டில் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil gdp


தற்போது சரியான பாதையில் இந்தியா பயணிப்பாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பை இந்தியா விரைவில் எட்டும் எனவும், அந்த இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்வதாகவும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரி வருவாய் அதிகரித்து வருவதையும் நிதியமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

2021-22 நிதியாண்டில் மட்டும் அரசின் வரி வருவாய் 34 சதவீதம் உயர்ந்து ரூ.27.07 லட்சம் கோடியாக இருந்தது. வரி வருவாய் அதிகரித்துள்ளதால் செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டிலும் செலவுகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு இருந்தது.

இந்தியாவுக்கு கெட்ட காலம்.. குறி சொல்லும் உலக வங்கி!
கடந்த 2019ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சி குறித்து பேசியிருந்தார். சர்வதேச அளவில் இந்தியா மிகப் பெரிய பொருளாதார சக்தியாகத் திகழும் எனவும், 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டுவோம் எனவும் கூறியிருந்தார். அதை நோக்கிய பயணத்தில் தற்போது சரியாக சென்றுகொண்டிருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி மோசடிகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சரியான முறையில் வரி செலுத்துவோரை ஊக்குவிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்