ஆப்நகரம்

2014 இருந்தே.. இந்தியா சரியான வழியில்தான் செல்கிறது.. பிரதமர் மோடி புகழாரம்!!

உலகளவில் ஓப்பிடுகையில் இந்தியப் பொருளாதார நிலை சீராக உள்ளதாக IMF பாராட்டியதை பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிக்கு கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 11 Jan 2023, 4:20 pm
கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்றுநோயிலிருந்து மீண்டு, இந்தியா இன்று உலகப் பொருளாதாரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சராசரியை விட கணிசமாக உயர்ந்து வருகிறது என்று IMF துணை நிர்வாக இயக்குனர் அன்டோனெட் சாயே தெற்காசியாவின் உறுதியான வளர்ச்சிக்கான பாதை மாநாட்டில் பாராட்டு மழை பொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil PM Modi


அதனையடுத்து இன்று இந்தூரில் (ஜனவரி 11, 2023) நடைபெற்ற “மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்யுங்கள் எனும் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் 7வது பதிப்பில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை “பிரகாசமான இடமாக” இருப்பதாக கூறியதை சுட்டிக் காட்டி மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

மேலும் உலக வங்கியின் கூற்றுப்படி, பல நாடுகளை விட இந்தியா உலகளாவிய பல தலைசுற்ற வைக்கும் சூழ்நிலைகளிலிருந்து மீண்டு சிறந்த நிலையில் தற்சமயம் உள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அதற்கு முக்கியக் காரணம் இந்தியாவின் பொருளாதார அடிப்படைக வலுவாக இருப்பதேயாகும் எனவும் கூறியுள்ளார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் மத்திய பிரதேச மாநில வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் கலந்துரையாடப்படும். மேலும் இந்தியாவின் இறையாண்மை, இளம் மக்கள்தொகை, அதிகப்படியான அரசியல் ஸ்தீரத்தன்மையால் இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி உந்தும் சக்திகளாக இருப்பதாகவும் பிரதம் உரையின்போது கூறியுள்ளார்.

இந்தியா 2014 ஆண்டு முதல் இந்தியா "சீர்திருத்தம், மாற்றம் மற்றும் செயல்திறன்" ஆகியவற்றின் பாதையில் முன்னேறிச் செல்வதாகவும் பிரதமர் கூறினார். ஆத்மநிர்பர் பாரத் அபியானின் தாக்கத்தை வலியுறுத்திய அவர், இந்த முயற்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிக உத்வேகத்தை அளித்தது மற்றும் முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்றியது என்றும் கூறியுள்ளார்.

இந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான வேகத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளதாகவும், இந்தியாவில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் துறைமுக கையாளும் திறன் மற்றும் துறைமுக திருப்பம் அபரிமிதமாக மேம்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) இந்த ஆண்டு G20 குழுவில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்