ஆப்நகரம்

அடுத்து உலக லெவலுக்கு போவோம்.. தபால் துறை வங்கி போடும் திட்டம்!

உலகளவிலான வங்கியாக மாற வேண்டும் என இந்திய தபால் துறை வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 15 Mar 2023, 12:49 pm
இந்திய தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (India Post Payments Bank) என்ற தபால் துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை உலக அளவுக்கு எடுத்துச்செல்லப்போவதாக அந்த வங்கியின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜே.வெங்கட்ராமூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ippb
ippb


இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த வங்கியில் இந்திய அரசின் தபால் துறைக்கு 100% பங்கு இருக்கிறது. ஏற்கெனவே இந்திய மக்களிடையே இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உலக அளவுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை எடுத்துச்செல்லப்போவதாக அதன் தலைவர் வெங்கட்ராமூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் தலைவர் ஜே.வெங்கட்ராமூ பேசியபோது, “இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தன்னை உலகளவிலான வங்கியாக மாற்றிக்கொள்வதற்கு விரும்புகிறது. 2018ஆம் ஆண்டில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தொடங்கப்பட்டபோது 80% பரிவர்த்தனைகள் ரொக்கத்திலேயே நடைபெற்றன.

எனினும், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இப்போது 20% பரிவர்த்தனைகள் மட்டுமே ரொக்கத்தில் நடைபெறுகின்றன. 80% பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையிலேயே நடைபெற்று வருகின்றன. தபால் அலுவலகங்களின் மிகப்பெரிய நெட்வொர்க் வாயிலாக மூலை, முடுக்குகளுக்கும் நாம் சேவை வழங்க முடியும்.

முழு வங்கியாக செயல்படுவதற்கான உரிமம் கிடைத்தால் பெரிய இலக்குகளை நம்மால் அடைய முடியும். அனைவருக்கும் நிதிச் சேவைகளை வழங்குவதற்கும், சமூக வளர்ச்சிக்கும் கடன்கள் முக்கியம். தபால் அலுவலகங்களின் பரவலான நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் நிதி மற்றும் கடன் வசதிகளை வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஒரு பரிவர்த்தனை வங்கி மட்டுமே. ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள உரிமத்தின் படி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியால் டெபாசிட், வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவது, இண்டர்நெட் வங்கி சேவை உள்ளிட்ட சேவைகளை மட்டுமே வழங்க முடியும். கடன்கள் வழங்கவோ, கிரெடிட் கார்டு வழங்குவதற்கோ இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக்கு அனுமதி இல்லை.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்