ஆப்நகரம்

போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டவர்களுக்கு பிரச்சினை.. தபால் துறை எச்சரிக்கை!

தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் துறை முக்கிய எச்சரிக்கை.

Samayam Tamil 24 Apr 2022, 2:15 pm
அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடி கும்பல்களின் அட்ராசிட்டி அதிகரித்துவிட்டது. அரசு, ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை, EPFO என பல பெயர்களில் வேடமிட்டு ஆன்லைன் மோசடி கும்பல்கள் பணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர்.
Samayam Tamil post office


இந்த வரிசையில் தற்போது இந்திய தபால் துறை பெயரிலும் மோசடி கும்பல்கள் கொள்ளை அடிக்க கிளம்பிவிட்டன. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் பெயரில் கிளம்பியுள்ள மோசடி கும்பல்கள் குறித்து தபால் துறை அதிகாரப்பூர்வமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, இந்திய தபால் துறை சில சர்வே, குயிஸ் போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் மானியத் தொகை வழங்கி வருவதாகவும் அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரஸ் போல பரவி வருகிறது. இது இந்திய தபால் துறையின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

உங்கள் பணம் டபுளா மாறிடும்.. பலருக்கும் தெரியாத போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
இந்நிலையில், சர்வே அடிப்படையில் இந்திய தபால் துறை மானியம், போனஸ் அல்லது பரிசுகளை வழங்குவதில்லை என தபால் துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை யாருக்கும் பரப்ப வேண்டாம் எனவும் தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், பொய் தகவலை நம்பி அடையாளம் தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வோர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர்கள் விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் தபால் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதனால் யாரேனும் பணத்தை இழக்க நேரிட்டால் அதற்கு இந்திய தபால் துறை பொறுப்பில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்