ஆப்நகரம்

ஊழியர்களுக்கு 30 கோடி ரூபாய் பரிசு வழங்கி அசத்திய இந்தியர்.. யார் இந்த சோஹன் ராய்?

25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் ஊழியர்களுக்கு 30 கோடி ரூபாய் பரிசு வழங்கிய இந்திய தொழிலதிபர்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 24 May 2023, 3:06 pm
ஷார்ஜாவில் இந்தியரால் நடத்தப்படும் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவருக்கும் 30 கோடி ரூபாய் பரிசு வழங்கு கவுரவித்துள்ளது.
Samayam Tamil sohan roy
sohan roy


ஐக்கிய அரபு நாடுகளில் ஷார்ஜாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஏரீஸ் குழுமம் (Aries Group). இந்நிறுவனத்தை இந்தியரான சோஹன் ராய் (Sohan Roy) 1998ஆம் ஆண்டில் தொடங்கினார். ஏரீஸ் நிறுவனம் கப்பல் வடிவமைப்பு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

ஏரீஸ் குழுமத்தில் சுமார் 2200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 25 நாடுகளில் ஏரீஸ் குழுமம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஏரீஸ் குழுமம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் வெள்ளி விழா கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஏரீஸ் குழுமம் தனது ஊழியர்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனைவருக்கும் 30 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக சோஹன் ராய் அறிவித்துள்ளார்.

இந்த 30 கோடி ரூபாய் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் வெள்ளி விழா பரிசு என சோஹன் ராய் தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்துடன் இருந்து ஊழியர்கள் செய்த பணிக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் 30 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் சோஹன் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோஹன் ராய், “25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மறும் செயல்திறனுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்த குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

sohan roy


ஏரீஸ் குழுமம் தனது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. உதாரணமாக ஊழியர்களின் பெற்றோருக்கு பெற்றோர் படி என்ற உதவித்தொகையையும் வழங்கி வருகிறது.

ஊழியர்களின் வெற்றியில் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் ஆதரவு மிகப்பெரிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ள சோஹன் ராய், ஏரீஸ் குழுமத்தின் வெற்றி விழாவில் பங்கேற்க ஊழியர்களின் பெற்றோருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்