ஆப்நகரம்

பொருளாதார வளர்ச்சி இதுதான்... மத்திய அரசு அறிக்கை வெளியீடு!

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Nov 2021, 6:21 pm
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. உள்நாட்டு உற்பத்தி முடங்கி, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பின்னடைவைச் சந்தித்தது. விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. லட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலையை இழந்தனர். புதிய வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போனது. எனினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.
Samayam Tamil gdp


மத்திய அரசு தரப்பிலிருந்து பல்வேறு பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதாலும், ஊரடங்கு தளர்வுகள் இருந்ததாலும் பொருளாதார வளர்ச்சியும் மேம்படத் தொடங்கியது. இந்நிலையில், அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், என்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் எனவும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பாக சில நிறுவனங்கள் தங்களது மதிப்பீடுகளை வெளியிட்டிருந்தன. ஹெச்டிஎஃப்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று தெரிவித்திருந்தது. அதேபோல, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த மதிப்பீட்டு அறிக்கையில் 7.9 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. 8.1 சதவீத வளர்ச்சியை இந்தியா சந்திக்கும் என்று எஸ்பிஐ ரிசர்வ் நிறுவனம் கணித்திருந்தது.

வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்! வாடிக்கையாளர்கள் ஷாக்!!

தனியார் துறையில் முதலீடுகளும் நுகர்வும் அதிகரித்ததால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாகப் பார்த்தால், உற்பத்தித் துறையில் 5.5 சதவீத வளர்ச்சியும், கட்டுமானத் துறையில் 7.5 சதவீத வளர்ச்சியும், வேளாண் துறையில் 4.5 சதவீத வளர்ச்சியும், சுரங்கத் துறையில் 15.4 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்