ஆப்நகரம்

என்னது பொருளாதார வளர்ச்சியா... அப்டீன்னா?

இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.5 சதவீதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

Samayam Tamil 13 Jul 2020, 6:52 pm
இந்தியப் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே மந்தநிலையில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது முதலே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையிலேயே இருக்கிறது. இதுபோன்ற சூழலில் சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் முடங்கியது. இது மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
Samayam Tamil gdp corona


இந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.5 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. நிதித் துறையில் நெருக்கடியான சூழல் நீடிப்பதால் இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு சாத்தியமே இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... கொரோனாவால் கார்ப்பரேட்டுகளுக்கு இவ்வளவு கடன் சுமையா?

இந்த முழு நிதியாண்டில் 4.5 சதவீத வீழ்ச்சி இருந்தாலும், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மிக மோசமாக 14.2 சதவீத வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள மாதங்களில் நிலைமை சீராகி வளர்ச்சி திரும்பினாலும், இந்தியப் பொருளாதாரம் அதிகபட்சம் 1.5 சதவீதம் வரையில் மட்டுமே வளரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளைக் காட்டிலும் வேளாண் துறை மட்டுமே தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஊரடங்கு காலம் அறிவிக்கப்பட்டது முதலே வேளாண் துறையில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் அத்துறையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

வைரம் இறக்குமதி: கால அவகாசம் நீட்டிப்பு!

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகையை அறிவித்திருந்தார். அதில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வேளாண் உள்கட்டுமானம், கிராமப்புற வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் கொரோனா பாதிப்பால் அதிக நெருக்கடி ஏற்பட்டது. அதை மீட்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருந்தாலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேவை குறைவு போன்ற பிரச்சினைகள் நீடிப்பதால் வளர்ச்சி ஏற்படவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்