ஆப்நகரம்

அரசு ஊழியர்கள் இதெல்லாம் பயன்படுத்த தடை.. மத்திய அரசு உத்தரவு!

மத்திய அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட சில மொபைல் ஆப்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jun 2022, 4:50 pm
மத்திய அரசு ஊழியர்கள் சில தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. அதாவது கூகுள் டிரைவ் (Google drive), ட்ராப் பாக்ஸ் (Dropbox), விபிஎன் (VPN) ஆகிய தொழில்நுட்ப உபகரணங்களை மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil govt employees


இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் ரகசியமான அரசு ஆவணங்களை கூகுள் டிரைவ் மற்றும் ட்ராப் பாக்ஸ் போன்ற கிளவுட் சேவைகளில் சேமித்துவைக்கக்கூடாது. கூகுள் டிரைவ் உள்ளிட்ட கிளவுட் சேவைகள் ஆவணங்களை இணையத்திலேயே சேமித்து வைக்க உதவுகின்றன.

இந்நிலையில், அரசு ஆவணங்களின் ரகசியம் காக்கவும், அச்சுறுத்தல்களை தவிர்க்கவும் கிளவுட் சேவைகளில் அரசு ஆவணங்களை சேமித்து வைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கிளவுட் சேவைகள் போக விபிஎன் சேவைகளால் ஆபத்து இருப்பதாக இந்திய அரசு கருதுகிறது.

தங்கப் பத்திரம் விற்பனை.. தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க சூப்பர் வாய்ப்பு!
இதுபோக Camscanner போன்ற மொபைல் ஆப்களையும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு Camscanner போன்ற ஆப்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு கருதி இந்த ஆப்களையும் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள் தங்கள் ஆண்ட்ராய்ட் போன்களை 'Root' செய்வதற்கும், ஆப்பிள் ஐபோன்களை 'Jailbreak' செய்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்