ஆப்நகரம்

ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி கொள்முதல் குறைப்பு.. மறுக்கும் இந்திய அரசு.. காரணம் என்ன?

ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி கொள்முதலைக் குறைக்க இந்திய அரசு அழுத்தம் தந்ததாக வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது.

Samayam Tamil 13 Aug 2022, 9:48 am
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. கடந்த பிப்ரவரியில் உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பு ரஷ்ய நாட்டிலிருந்து மிகக் குறைந்த அளவே கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.
Samayam Tamil Putin_Modi


அதனைத் தொடர்ந்து ஜூலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இந்தியா, ரஷ்யாவிடமிருந்து பெற்றுள்ளது. அதனை அடுத்து ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாங்கும் நாடான சீனாவை முந்தியுள்ளது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சில அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதியை இந்திய நிறுவனங்கள் முடுக்கிவிட்டுள்ளது.

ஆனால் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதில் மேற்கத்திய நாடுகளிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ இந்தியாவிற்கு எந்த அழுத்தமும் இல்லை என்று இந்தியா அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரை அடுத்து ரஷ்யாவின் நட்பு நாடுகள் அதன் எரிசக்திகளைப் பணமாகவோ (அ) தங்கம் அல்லது கிரிப்டோ கரன்சிகள் மூலம் செலுத்திப் பெறலாம் என்று அறிவித்திருந்தது.

ஜூலை மாதத்தில், ரஷ்யா இந்தியாவின் மூன்றாவது பெரிய நிலக்கரி சப்ளையராக மாறியுள்ளது. வரலாற்று ரீதியாக ஏற்றுமதியில் ஆறாவது இடத்திலிருந்து இந்திய முன்னேறி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஓரளவு மாற்றத்தக்க ரூபாயில் செலுத்த அனுமதி அளித்த அடுத்த இரண்டு மாதங்களில் ரஷ்யாவுடனான வர்த்தகம் உயரும் என்று இந்தியா ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்