ஆப்நகரம்

இப்படி பண்ணா எப்படிபா? உனக்கு எரிபொருள் கிடையாது போ - ஜெட் ஏர்வேஸை நிராகரித்த ஐ.ஓ.சி!

பணத்தட்டுப்பாடு காரணமாக சிக்கலில் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எரிபொருள் வழங்க ஐ.ஓ.சி மறுத்துள்ளது.

Samayam Tamil 5 Apr 2019, 7:39 pm
விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. பயணிகளைக் கவர பல்வேறு கட்டணச் சலுகைகள், சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகின்றன. இந்தப் போட்டியால் சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து கொண்டிருக்கின்றன.
Samayam Tamil Indian_oil-Jet_Airways_


அதில் கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விமானங்களை குத்தகைக்கு வாங்கி ஜெட் ஏர்வேஸ் இயக்கியது. ஆனால் வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஏராளமான கடன் வைத்துள்ளது.

இதனால் 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ், பலவற்றை நிறுத்தி விட்டு 16 வழித்தடங்களில் மட்டும் இயக்கி வருகிறது. மேலும் விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்களுக்கு மாதச் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந்த சூழலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 51% பங்குகளை கடன் அளித்த தனியார் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் நிரப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருள் அளித்து வந்தது. இதற்கு மிகப்பெரிய தொகையை பாக்கி வைத்துள்ளதால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பெட்ரோல் சப்ளையை இன்று நண்பகல் 12 மணி முதல் நிறுத்திவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்