ஆப்நகரம்

36 லட்சம் பேருக்கு வேலை கொடுத்த இந்தியர்கள்!

சர்வதேச அளவில் 36 லட்சம் பேருக்கு இந்தியாவைச் சேர்ந்த செயலதிகாரிகள் வேலை கொடுத்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 9 Jul 2020, 8:20 pm
இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வேலைக்காகச் செல்லும் பலர் அங்கு உயர் பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சத்ய நாதெள்ளா, இந்திரா நூயி, சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் அதற்கு உதாரணமாக உள்ளனர். பிரபலமான நிறுவனங்களில் அவர்கள் மேலிடத்தில் வேலை பார்ப்பது மட்டுமல்லாமல், அந்த நிறுவனங்களில் பலருக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு செயலதிகாரிகள் சர்வதேச அளவில் 36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil job


இந்தியாவைச் சேர்ந்தவரும் சிலிக்கான் வேலியில் தற்போது வசித்துவரும் தொழிலதிபருமான ராங்கசாமி என்பவர் இந்தியாஸ்போரா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவைச் சேர்ந்த 58 செயலதிகாரிகள் உலகின் பல்வேறு நாடுகளில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் மொத்த வருவாய் 1 லட்சம் கோடி டாலரை விட அதிகம் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

50% சம்பளம் கட்: பஜாஜ் ஆட்டோ அதிரடி!

அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த செயலதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஐடி துறை மட்டுமல்லாமல் வங்கி, நுகர்வோர் சாதனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் 37 முதல் 74 வயதுடையவர்கள் எனவும், இவர்களின் சராசரி வயது 54 எனவும் இந்த ஆய்வில் ரங்கசாமி கூறியுள்ளது. கொரோனா நெருக்கடி சமயத்தில் இந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு நிவாரண நிதியையும் இந்நிறுவனங்கள் அதிகமாக வழங்கி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வருவதாகவும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்