ஆப்நகரம்

கொரோனா வதந்தி... ரூ.20,000 கோடி கேட்கும் கோழிப் பண்ணையாளர்கள்!

கொரோனா பிரச்சினையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கோழிப் பண்ணைத் துறைக்கு ரூ.20,000 கோடி தேவை என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Samayam Tamil 5 Aug 2020, 7:17 pm
இந்தியாவில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதன் ஆரம்ப கட்டத்தில் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற வதந்தி பரவியது. இதனால் பொதுமக்கள் சிக்கன் வாங்கச் சாப்பிட அஞ்சினர். இது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் வீண் வதந்தியால் இந்தியாவின் கோழிப் பண்ணைத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சிக்கன், முட்டை போன்றவற்றுக்கான தேவையும் விற்பனையும் பெரும் வீழ்ச்சியடைந்தது. சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று அரசு தரப்பிலும் மருத்துவர்கள் தரப்பிலும் கூறப்பட்டாலும் மக்களிடையேயான அச்சம் தொடர்ந்தது.
Samayam Tamil poultry industry


இந்நிலையில் கொரோனா பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கோழிப் பண்ணைத் துறைக்கு உடனடியாக ரூ.20,000 கோடி நிதியுதவி தேவை என்று அத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். கோழியின் விலை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 70 சதவீதம் வரை சரிந்ததாகவும், இதனால் விவசாயிகளும் பண்ணையாளர்களும் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் சீனிவாசா ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் சித்தூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வதந்தி: சிக்கன் விற்பனை பாதிப்பு!

அவர் மேலும் பேசுகையில், “உற்பத்தி செலவுகளுக்கு ஏற்றவாறு இப்போது விலை சற்று உயர்ந்துள்ளது. ஆனால் எங்களது துறைக்கு வங்கிகள் இன்னும் கடன் கொடுக்கத் தயாராக இல்லை. ஆண்டுக்கு 95 பில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதால் சர்வதேச அளவில் இந்தியா முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2.5 கோடிப் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 14 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இத்துறைக்கு இப்போது உடனடியாக நிதியுதவி தேவை. வங்கிகள் வாயிலாகக் கடனுதவிகள் கிடைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்