அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவின் புனித யாத்திரைத் தலங்களாக கருதப்படும் வாரணாசி, பிரயாக்ராஜ் (அலகாபாத்) போலவே அயோத்தியும் ஏராளமான பக்தர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அயோத்திக்கு தினசரி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில்கள் மூலம் அயோத்திக்கு பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என இந்திய ரயில்வே கருதுகிறது.
ராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல்; எப்படி இருக்கிறது அயோத்தி? - லேட்டஸ்ட் நிலவரம்!
தற்போது ஒவ்வொரு நாளும் அயோத்தி ரயில்நிலையத்திற்கு வருவோரின் எண்ணிக்கை சுமார் 5,000ஆக உள்ளது. பொதுமக்களுக்காக ராமர் கோயில் திறந்துவிடப்பட்ட பிறகு அயோத்திக்கு ரயில் மூலம் வருவோரின் எண்ணிக்கை குறைந்தது 12 மடங்காவது உயரும் என ரயில்வே அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
கூட்டம் உயர்வை சமாளிக்க அயோத்தி ரயில் நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தற்போதைய சூழலில், அயோத்திக்கு அருகாமையில் உள்ள ஃபரிதாபாத் ரயில் நிலையம் அதிக கூட்டத்தை சமாளிக்கக்கூடியதாக இருக்கிறது.
அயோத்தி ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக உத்தரப் பிரதேச மாநில அரசிடம் இருந்து இந்திய ரயில்வே 1 லட்சம் சதுர அடி நிலம் கேட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பெரிய ரயில் நிலையங்களை போலவே அயோத்தியிலும் மாபெரும் ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவின் புனித யாத்திரைத் தலங்களாக கருதப்படும் வாரணாசி, பிரயாக்ராஜ் (அலகாபாத்) போலவே அயோத்தியும் ஏராளமான பக்தர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அயோத்திக்கு தினசரி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில்கள் மூலம் அயோத்திக்கு பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என இந்திய ரயில்வே கருதுகிறது.
ராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல்; எப்படி இருக்கிறது அயோத்தி? - லேட்டஸ்ட் நிலவரம்!
தற்போது ஒவ்வொரு நாளும் அயோத்தி ரயில்நிலையத்திற்கு வருவோரின் எண்ணிக்கை சுமார் 5,000ஆக உள்ளது. பொதுமக்களுக்காக ராமர் கோயில் திறந்துவிடப்பட்ட பிறகு அயோத்திக்கு ரயில் மூலம் வருவோரின் எண்ணிக்கை குறைந்தது 12 மடங்காவது உயரும் என ரயில்வே அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
கூட்டம் உயர்வை சமாளிக்க அயோத்தி ரயில் நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தற்போதைய சூழலில், அயோத்திக்கு அருகாமையில் உள்ள ஃபரிதாபாத் ரயில் நிலையம் அதிக கூட்டத்தை சமாளிக்கக்கூடியதாக இருக்கிறது.
அயோத்தி ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக உத்தரப் பிரதேச மாநில அரசிடம் இருந்து இந்திய ரயில்வே 1 லட்சம் சதுர அடி நிலம் கேட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பெரிய ரயில் நிலையங்களை போலவே அயோத்தியிலும் மாபெரும் ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.