ஆப்நகரம்

சரக்கு போக்குவரத்து: கோடிகளில் குளிக்கும் ரயில்வே!

சரக்கு போக்குவரத்து மூலமாக செப்டம்பர் மாதத்தில் ரூ.9,896.86 கோடியை ஈட்டியுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Oct 2020, 7:47 pm
மார்ச் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்துச் சேவை நிறுத்தப்பட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கான சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி வருவதற்காக சிறப்பு ஷ்ராமிக் ரயில்களும் ஊரடங்கு காலத்தில் இயக்கப்பட்டன. ரயில் பயணிகளுக்கான சேவை நிறுத்தப்பட்டதால் இந்திய ரயில்வே துறைக்குக் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனினும் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. குறிப்பிடும்படியான சாதனையாக சென்ற செப்டம்பர் மாதத்தில் ரூ.9896.86 கோடியை சரக்கு போக்குவரத்தின் மூலம் இந்திய ரயில்வே துறை ஈட்டியுள்ளது.
Samayam Tamil railway


2019ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாகக் கிடைத்த ரூ.8716.29 கோடியை விட இது 13.35 சதவீதம் அதிகமாகும். அதாவது இந்த ஆண்டில் ரூ.1180.57 கோடி அதிகமாகக் கிடைத்துள்ளது. சரக்குப் போக்குவரத்து சேவையில், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 100 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. எந்தவொரு ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில் இவ்வளவு அதிகமான சரக்குகள் ஏற்றப்படவில்லை என்கிறார் ரயில்வே போர்டு தலைமைச் செயலதிகாரியான வி.கே.யாதவ்.

கடன் வாங்க இரண்டு மாநிலங்களுக்கு அனுமதி!

2019 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 88 மில்லியன் டன் அளவு சரக்குகள் மட்டுமே ஏற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் அந்த அளவு 102 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அளவு அடிப்படையில் சரக்குப் போக்குவரத்தில் 15.3 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் இந்திய ரயில்வே துறையால் வழங்கப்பட்டு வருவதாகவும், கொரோனா பாதிப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அனைத்து விதங்களிலும் ரயில்வே துறை மேம்பாடு கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்