ஆப்நகரம்

ரயில் சரக்கு போக்குவரத்தில் சாதனை.. இந்திய ரயில்வே பிசினஸ் தூள்!

செப்டம்பர் மாதத்தில் இந்திய ரயில்வேயின் சரக்கு ரயில்கள் 115.80 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியுள்ளன.

Samayam Tamil 3 Oct 2022, 11:47 am
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்திய ரயில்வே 115.80 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால் 9.15% வளர்ச்சி.
Samayam Tamil freight train


இத்துடன் கடந்த 25 மாதங்களாக இந்திய ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி போக்குவரத்து 6.8 மில்லியன் டன்னும், இரும்பு தாது போக்குவரத்து 1.2 மில்லியன் டன்னும், சிமெண்ட் பொருட்கள் 0.4 மில்லியன் டன்னும், உரம் 0.3 மில்லியன் டன்னும் உயர்ந்துள்ளன.

இதேபோக வாகனங்கள் போக்குவரத்தும் சுமார் 72.2% வளர்ச்சி பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை, அதாவது முதல் அரையாண்டில் இந்திய ரயில்வே சரக்கு ரயில்கள் 668.86 மில்லியன் டன் அளவிலான பொருட்களை ஏற்றிச்சென்றுள்ளன.

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இவ்வளவா.. கடந்த ஆண்டை விட உயர்வு!
மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி விநியோகத்தை உயர்த்துவதற்கு மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி அமைச்சகமும், இந்திய ரயில்வேயும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் செப்டம்பர் மாதத்தில் சரக்கு போக்குவரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மின் உற்பத்தி ஆலைகளுக்கு சரக்கு ரயில்களால் விநியோகம் செய்யப்பட்ட நிலக்கரி அளவு 42 மில்லியன் டன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால் 6.2 மில்லியன் டன் உயர்வு. அதாவது 17.3% வளர்ச்சி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்