ஆப்நகரம்

உயர்வுடன் வர்ததகமாகும் இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

TNN 31 Aug 2016, 2:58 pm
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
Samayam Tamil indian share markets high today
உயர்வுடன் வர்ததகமாகும் இந்திய பங்குச்சந்தைகள்


இந்திய பங்குச்சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 131 புள்ளிகள் உயர்ந்து 28,474 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 55 புள்ளிகள் அதிகரித்து 8,800 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஷாங்காய் கூட்டுக் குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் ஆகியவையும் உயர்ந்து காணப்பட்டன.

தற்போது சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்ந்து, 28,507 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 66 புள்ளிகள் அதிகரித்து, 8,811 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்