ஆப்நகரம்

உயர்வுடன் தொடங்கியது இந்தியப் பங்குச்சந்தைகள்

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளன.

TNN 2 Sep 2016, 11:08 am
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளன.
Samayam Tamil indian share markets starts with high today
உயர்வுடன் தொடங்கியது இந்தியப் பங்குச்சந்தைகள்


இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 86 புள்ளிகள் அதிகரித்து, 28,509 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து, 8,796 புள்ளிகளில் வர்த்தகமானது.

வர்த்தகத்தில் 237 பங்குகள் முன்னேற்றப் பாதையிலும், 93 பங்குகள் சரிவை நோக்கியும் வர்த்தகமாகி வருகின்றன. இதர ஆசிய பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிக்கெய் சரிவுடனும், ஹாங்காங்கின் ஜேங் செங் சந்தை உயர்வுடனும் வர்த்தகமாகி வருகின்றன.

தற்போது சென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்ந்து, 28,482 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நிஃப்டி 8 புள்ளிகள் அதிகரித்து, 8,783 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்