ஆப்நகரம்

இன்று மும்பை பங்குச் சந்தை மூடல்; அடுத்த வாரமும் 3 நாட்களுக்கு விடுப்பு!!

இன்று மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நடந்து வருவதால் மும்பை பங்குச் சந்தை மூடப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 1:07 pm
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடத்து வருகிறது. இதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil Sensex Close


பங்குச் சந்தை மூடப்பட்டு இருப்பதால் பங்குகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் தொடர்பான எந்தக் கேள்விகளுக்கும் இன்று பதில் கிடைக்காது. நாளைதான் கிடைக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை 0.63% உயர்ந்து 39,298.38 புள்ளிகளில் முடிந்தது. நிப்டி 0.65% உயர்ந்து 11,661.85 புள்ளிகளில் முடிந்தது.

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகத்திற்கு கிடைத்த ரூ. 260 கோடி முதலீடு!!

அடுத்த திங்கள் கிழமையும் மும்பை பங்குச் சந்தை மூடப்பட்டு இருக்கும். 28ஆம் தேதி, திங்கள் கிழமை தீபாவளி என்பதால், பங்குச் சந்தை மூடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், திங்கள் கிழமையும் தீபாவளி என்பதாலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பங்குச் சந்தை மூடியே இருக்கும். ஆனால், தீபாவளி அன்று மாலை மட்டும் சிறிது நேரம் முகூர்த்த வர்த்தகம் நடைபெறும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து முழுவீச்சில் பேச்சுவார்த்தை

அன்று நடக்கும் வர்த்தகத்தை லட்சுமிகரமாக கருதுவதால் ஆண்டு முழுவதும் வர்த்தகம் நன்றாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். பெரிய அளவில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அன்று பங்குகளை வாங்குவது வழக்கம்.
பட்டைய கிளப்பிய பஜாஜ்! இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 4% அதிகரிப்பு

அடுத்த செய்தி

டிரெண்டிங்