ஆப்நகரம்

கொரோனா மீது பயமா, பொருளாதாரம் மீது பயமா?

பெரும்பாலான இந்தியர்களுக்கு கொரோனாவை விட பொருளாதார வீழ்ச்சி மீதே அதிக அச்சம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 21 May 2020, 7:38 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு புறம் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க மறுபுறம் வீழ்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம் பயணித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் மே 31ஆம் வரையில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்து தொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது.
Samayam Tamil corona economy


இந்நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி மீது இந்தியர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. லக்னோ இந்திய மேலாண்மை நிறுவனத்தின் வளரும் பொருளாதாரங்களுக்கான சந்தைப்படுத்துதல் மையம் (CMEE) சார்பாக நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக மேற்கொண்ட ஆய்வில், 79 சதவீத இந்தியர்கள் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மீது அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றிவிடுமோ என்ற அச்சத்தை விட ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகிவிடுமோ என்ற அச்சம்தான் இந்தியர்களிடம் அதிகமாக இருக்கிறது.

சீன நிறுவனங்களுக்கு தலைவலி... அமெரிக்காவின் புதிய சட்டம்!

இந்தியாவின் 23 மாநிலங்களில் 104 இரண்டாம் அடுக்கு மூன்றாம் அடுக்கு நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக முதலாவது ஊரடங்கு அமலானபோது 57 சதவீத இந்தியர்களிடம் பொருளாதார வளர்ச்சி மீதான அச்சம் இருந்தது. அதேபோல, இரண்டாவது ஊரடங்கு அமலானபோது பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து 63 சதவீதத்தினர் அச்சம் தெரிவித்திருந்தனர். ஃபேஸ்புக், லிங்க்டு இன் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக சுமார் 931 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்