ஆப்நகரம்

மனிதர்கள் வேண்டாம்... ரோபோக்கள் போதும்... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

பணியிடங்களில் ரோபோக்களைக் கொண்டு வேலையை எளிதாக்க விரும்புவதாக சர்வதேச ஆய்வில் 98 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 27 Jan 2020, 6:41 pm
பணியிடங்களில் ரோபோக்களைக் கொண்டு வேலையை எளிதாக்க விரும்புவதாக சர்வதேச ஆய்வில் 98 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil indians are most open to workplace automation reveals a report
மனிதர்கள் வேண்டாம்... ரோபோக்கள் போதும்... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!


ஐடியில் தொடங்கி ஆட்டோமொபைல்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்மைப் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. முதலில் ஐடி துறையில் நீடித்த இப்பிரச்சினை தற்போது ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கிறது. மற்ற துறைகளிலும் வேலையின்மைப் பிரச்சினை இருக்கிறது. ஐடி நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் தானியங்கி மயத்தின் வளர்ச்சி வேலையின்மைப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மனிதர்கள் செய்யும் வேலையை அவர்களை விடச் சிறப்பாக செய்யும் ரோபோக்களைக் கொண்டு நிறுவனங்கள் நிரப்பி வருகின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் குறைவதோடு, ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கான வேலையும் பறிபோகிறது.

ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

உலகின் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் ரோபோக்களால் மனிதர்களின் வேலைக்கு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ரோபோட்டிக் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வு நிறுவனமான ’ஆட்டோமேஷன் எனிவேர்’ என்ற நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்திய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ரோபோக்களைக் கொண்டு வேலையைச் சுலபமாகச் செய்து முடிக்க விரும்புவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சுமார் 10,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 10 சதவீதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

எதிர்காலம் என்னாகும்?

இந்த ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 98 சதவீதத்தினர், தங்களது நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களைக் கொண்டு வேலையை எளிதாகச் செய்து முடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து சிங்கப்பூரில் 98 சதவீதத்தினரும், மெக்ஸிகோவில் 97 சதவீதத்தினரும், பிரேசில் நாட்டில் 97 சதவீதத்தினரும், கொரியாவில் 90 சதவீதத்தினரும் இவ்வாறு கூறியுள்ளனர். சர்வதேச அளவில் இதன் அளவு 91 சதவீதமாக இருக்கிறது. ஏற்கெனவே வேலையின்மைப் பிரச்சினை அதிகமாக உள்ள இந்தியாவில் தானியங்கி மயத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற இந்த ஆய்வு பணியாளர்களையும், வேலை தேடுவோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்