ஆப்நகரம்

ரிட்டயர்மெண்ட் பணத்தை கரைக்கும் பணவீக்கம்.. இந்தியர்கள் கவலை!

பணவீக்கத்தால் ரிட்டயர்மெண்ட் சேமிப்புகள் கரைந்துவிடுமோ என இந்தியர்கள் கவலை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 Mar 2023, 5:15 pm
ஒவ்வொரு நபரும் பணிக்காலத்தின்போதே தனது ஓய்வுக்காலத்திற்கும் (Retirement) சேர்த்து திட்டமிட வேண்டும். ஓய்வுக்காலத்தில் போதிய நிதி பாதுகாப்பு இல்லாவிட்டால் முதுமையில் கடும் நெருக்கடி ஏற்படக்கூடும்.
Samayam Tamil Retirement
Retirement


இந்நிலையில், பணவீக்கத்தால் ரிட்டயர்மெண்ட் சேமிப்பு அனைத்தும் காலியாகிவிடுமோ என பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது என சர்வே ரிப்போர்ட் கூறுகிறது. மேலும், ரிட்டயர்மெண்ட் சேமிப்பு பாதிக்கப்பட்டால், நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அதை சமாளிக்க போதிய பணம் இருக்காது எனவும் இந்தியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாக இந்த சர்வே கூறுகிறது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் (ICICI Prudential Life Insurance) நிறுவனம் இந்தியர்கள் ரிட்டயர்மெண்ட்டுக்கு எவ்வளவு தயாராக இருக்கின்றனர் என்பது பற்றி ‘Is India Prepared for retirement?' என்ற தலைப்பில் சர்வே ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஓய்வுக்காலம் குறித்து இந்தியர்களுக்கு இருக்கும் திட்டங்கள் குறித்து பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும் கூட, பணவீக்கத்தால் ரிட்டயர்மெண்ட் சேமிப்புகள் கரைந்துவிடுமோ என்ற அச்சம் பெரும்பாலான இந்தியர்களிடம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது பணிக்காலத்தில் இருக்கும் வாழ்க்கை முறையை ஓய்வுக்காலத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என 83% பேர் தெரிவித்துள்ளனர். மேலும் ஐந்தில் மூன்று பங்கினர் தங்கள் ஓய்வுக்காலத்தில் வாழ்க்கையை அனுபவித்து, நண்பர்களுடன் தொடர்பில் இருந்து, வெளிநாடுகளுக்கு சென்று, நிதிப் பாதுகாப்பை உணர்ந்து, மன அமைதியுடன் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற பாசிட்டிவ் விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பணவீக்கத்தால் ரிட்டயர்மெண்ட் சேமிப்புகள் கரைந்துவிடும் எனவும், மருத்துவச் செலவுகள் அதிகரிப்பது கவலையை தருவதாகவும், இதனால் ஓய்வுக்கால வாழ்க்கை பாதிக்கப்படலாம் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தியர்கள் மொத்த வருமானத்தில் சராசரியாக 11% தொகையை ரிட்டயர்மெண்ட் சேமிப்புக்கு முதலீடு செய்கின்றனர். பணி ஓய்வு பெறுவதற்கு சராசரியாக 65.4 லட்சம் ரூபாய் தேவை என சர்வேயில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிட்டயர்மெண்ட் காலத்தில் ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான திட்டங்களையே பலரும் தேர்வு செய்ய விரும்புகின்றனர். குறிப்பாக ஆண்டுத்தொகை திட்டத்தில் (Annuity Plans) முதலீடு செய்யவே பலரும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இன்னொரு பிரிவினர் விரைவாகவே ரிட்டயர்மெண்ட்டுக்கு சேமித்து 40 வயதுக்குள் பணி ஓய்வு பெறும் அளவுக்கு தயாராக இருப்பதும் இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. இவர்கள் தங்கள் வருமானத்தில் 17% தொகையை ரிட்டயர்மெண்ட்டுக்கு ஒதுக்கி வைத்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் NPS, ஆண்டுத்தொகை போன்ற திட்டங்களில் முதலீடு செய்து வைத்துள்ளனர்.

சர்வேயில் பங்கேற்றவர்களில் 65% பேர் ஆண்டுத்தொகை திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் 32% பேர் ஏற்கெனவே ஆண்டுத்தொகை திட்டத்தில் முதலீடு செய்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்