ஆப்நகரம்

விசா கெடுபிடி: அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்கள்!

கொரோனா பீதியால் இந்திய அரசு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

Samayam Tamil 12 May 2020, 2:27 pm
இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமானச் சேவை, ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு, இந்தியாவுக்குப் பாதுகாப்பு அம்சங்களுடன் அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், இந்திய அரசு தற்போது விதித்துள்ள சில விசா கட்டுப்பாடுகளால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்புவது சிக்கலாகியுள்ளது.
Samayam Tamil us visa


அமெரிக்காவைப் பொறுத்தவரையில், கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 3.3 கோடிக்கும் மேலான அமெரிக்கர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்கே திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு வாழும் இந்தியர்கள் ஏர் இந்தியா விமானங்கள் மூலமாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டாலும் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவில் ஹெ1.பி. விசா அல்லது கிரீன் கார்டு பெற்ற இந்தியர்கள் இந்தியாவுக்கு வரலாம். ஆனால், அவர்களது குழந்தைகள் அமெரிக்காவில் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் அவர்கள் இப்போது இந்தியாவுக்கு வர இயலாது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஆயுளை கெடுக்கும் கொரோனா!

இந்தியாவைச் சேர்ந்த கணவன், மனைவி அமெரிக்காவில் செட்டில் ஆகி அவர்களுக்கு அங்கேயே குழந்தை பிறந்திருந்தால் அக்குழந்தைகளை தற்போது இந்தியாவுக்கு அழைத்து வர இயலாது. அந்தப் பெற்றோர்கள் மட்டுமே தனித்து வர முடியும். இந்திய அரசின் இந்த விசா கட்டுப்பாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிலும் அவர்கள் 60 நாட்களுக்கு மட்டுமே வசிக்க முடியும் என்ற உத்தரவு போடப்பட்டுள்ளதால் அங்கேயும் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 60 நாள் கால அவகாசத்தை 180 நாட்களாக நீட்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீட்லயே வேலை பாருங்க: அமேசான் இந்தியா அறிவிப்பு!

அமெரிக்காவிலும் இருக்க முடியாமல் இந்தியாவுக்கும் வர முடியாமல் இக்கட்டான சூழலில் தவிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசோ அல்லது அமெரிக்க அரசோ தகுந்த தீர்வு வழங்க வேண்டும் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்