ஆப்நகரம்

ஊரடங்கு உத்தரவால் ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பு!

மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பதால் இணையப் பயன்பாடு 87 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 3:11 pm
இந்தியாவையே இருளுக்குள் மூழ்கடித்துள்ள கொரோனா வைரஸால் இதுவரையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க 21 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே இருக்கின்றனர். காய்கறி, பால், இறைச்சி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு மட்டுமே மக்கள் வெளியே வந்து செல்கின்றனர்.
Samayam Tamil ஊரடங்கு உத்தரவால் ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்புcollage


வீட்டிற்கு உள்ளேயே முடங்கிக் கிடங்கும் மக்களுக்கு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் பொழுதுபோக்காக இருக்கின்றன. இவை மட்டுமல்லாமல் மொபைல் போன்கள் பயன்பாடும், இணையப் பயன்பாடும் இக்காலத்தில் மிக அதிகமாக இருக்கிறது. பொழுதுபோக்கு, செய்திகளைத் தெரிந்துகொள்வது, விளையாட்டு போன்றவற்றில் இணையப் பயன்பாடு மூலமாக மக்கள் தங்களது நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் இணையப் பயன்பாடு 87 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுங்கள்: ரிசர்வ் வங்கி வேண்டுகோள்!

ஹேமர்கோஃப் நிறுவனம் சார்பாக மார்ச் 28ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் ஒரு வாரத்தில் மக்கள் சராசரியாக தினசரி 280 நிமிடங்கள் இணையம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதில் 75 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் வாட்ஸ் ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு முந்தைய வாரத்தில் தினசரி இணையப் பயன்பாட்டு அளவு 150 நிமிடங்களாக மட்டுமே இருந்துள்ளது.

தங்கம் விலை: இறங்கி வந்த தங்கம்... இதே நிலை நீடிக்குமா?

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் அதிகப் பயன்பாட்டில் இருந்த நேரம் இரவு 10 மணி முதல் இரவு 12 மணியாக இருந்துள்ளது. ஆனால் சென்ற வாரத்தில் இரவு 7 மணியில் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த 1,300 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்