ஆப்நகரம்

கொரோனா சமயத்தில் இந்தியர்கள் எதில் செலவிடுகிறார்கள்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆயுர்வேதப் பொருட்களில் இந்தியர்கள் அதிகமாகச் செலவிடுவது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 7 Aug 2020, 9:02 pm
இந்தியாவில் பிப்ரவரி மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் கொரோனா பரவலையும், கொரோனா உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களது தேவையற்ற செலவுகளைக் குறைத்துள்ளனர். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதிலும் அவசியமற்ற செலவுகளையும் குறைத்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவிட்டு வருகின்றனர்.
Samayam Tamil pandemic spending


நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் விஷயங்களிலும் மக்கள் கொரோனா காலத்தில் அதிகமாகச் செலவிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், உயிர் பலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியில் மக்கள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால், மூலிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தேன், நெல்லிக்காய், அதிமதுரம் போன்ற பொருட்களை அதிகமாக வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் டாபர், ஹிமாலயா போன்ற நிறுவனங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

கொரோனாவுக்கு நன்றி சொல்லும் மசாலா துறை... காரணம் இதுதான்!

கொரோனாவைத் தடுக்க முடியாது என்ற சூழ்நிலையில், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்ற முயற்சியில் ஆயுர்வேதப் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல், மேகி நூடூல்ஸ், கிட்கேட், மஞ்ச் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், நொறுக்குத்தீனிகளின் விற்பனையும் ஊரடங்கு காலத்தில் அதிகரித்ததாக நெஸ்ட்லே நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல, ஏப்ரல், மே மாதங்களில் பார்லேஜி, பிரிட்டானியா போன்ற நிறுவனங்களின் பிஸ்கட் விற்பனையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

தூள் கிளப்பும் பிஸ்கட் விற்பனை... காரணம் இதுதான்!

நோய் எதிர்ப்பு சக்திக்காக மஞ்சள், சீரகம், இஞ்சி, ஏலக்காய், கொத்தமல்லி, வெந்தயம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களுக்கான பயன்பாடு இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் விளையும் நறுமணப் பொருட்களுக்கான தேவை இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா வந்தபிறகு இந்தியாவின் நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டாலர் மதிப்பீட்டில் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் 329 மில்லியன் டாலர் மதிப்புக்கு நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்