ஆப்நகரம்

மொபைல் போனிலேயே வாழும் இந்தியர்கள்: ஆய்வு!

2020ஆம் ஆண்டில் இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 4.6 மணி நேரம் மொபைல் போனிலேயே செலவிட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 14 Jan 2021, 6:42 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. மாதக் கணக்கில் வீட்டுக் குள்ளேயே கிடந்த மக்கள் மொபைல் போன்களிலேயே அதிக நேரம் செலவிட்டனர். போன் பேசுவது மட்டுமல்லாமல், கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது போன்ற பல்வேறு தேவைகளுக்காக மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்தினர். இதனால் 2020ஆம் ஆண்டில் மொபைல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
Samayam Tamil smartphones


2020ஆம் ஆண்டில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு 39 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 4.6 மணி நேரம் செலவிடுகின்றனர். 2019ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் பயன்பாடு 3.3 மணி நேரமாக இருந்தது. 2020ஆம் ஆண்டில் மொபைல் ஆப் பதிவிறக்கம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 24.27 பில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் செயலி பயன்பாட்டில் சர்வதேச அளவில் இந்தியா 25ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல, சர்வதேச அளவில் மொபைல் ஆப் டவுன்லோடில் சீனாவை அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

தொழில்நுட்ப மையம்: சர்வதேச அளவில் பெங்களூரு டாப்!

இந்த ஆய்வு முடிவுகளை ஆப் ஆனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் மொபைல் ஆப் பயன்பாட்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பயன்பாட்டு அடிப்படையில் பார்த்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகிய இரண்டு செயலிகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப் செயலியில் நபர் ஒருவர் சராசரியாக மாதத்துக்கு 21.3 மணி நேரம் செலவிட்டுள்ளனர். இது 2019ஆம் ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாகும். ஃபேஸ்புக் பயன்பாட்டில் 15 சதவீத வளர்ச்சியும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் 10 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

கேம் ஆப்களிலேயே லூடோ கிங், பப்ஜி ஆகிய செயலிகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்